Total Pageviews

Sunday, June 27, 2010

அண்ணாச்சி குஞ்சு

அண்ணாச்சி அன்று தன் மளிகைக் கடையில் கொஞ்சம் பிசியாகத்தான் இருந்தார்.அப்போது அலை பேசி " நெஞ்சே நெஞ்சே " என்ற பாடலை எதிர் முனைக்கு பாடிக் கொண்டே இங்கு துடித்தது.
" இங்கிட்டு .............மளிகைக் கடல் ஒனேர் ......... அண்ணாச்சி பேசுதேன் அங்கிட்டு யாரு?"
"சூர்யா இருக்காரா?' என்றது அழைத்த அந்தத் தேன் குரல்.( பெண் குரல் எனச் சொல்லத் தேவை இல்லை).

"நீங்க யாரு புள்ளை?"

" ம்ம்.... எங்க அப்பா அம்மா பொண்ணு " என்றது நக்கலாக எதிர் முனையில்.

அண்ணாச்சி அவ்வளவு சீக்கிரமாக பெண்களிடம் அதுவும் இளம் பெண்களிடம் கோபப் பட மாட்டார். எனவே " ஏ புள்ளை காலங் காத்தாலே கிருத்துருவம் பண்ணாதே ..என்ன வேணும் சொல்லு"

மறுபடியும் எதிர் முனையில் " சூர்யா இருக்காரா .நான் அவரோட பிரெண்டு .."

" இங்கன அப்படி யாரும் இல்லை " .

"பின்ன நீங்க ஏன் சூர்யா போன வைச்சு இருக்கீங்க அப்போ அவரு போனை சுட்டுப் புட்டியளோ " என்று மிமிக்ரி செய்தது .

அண்ணாச்சிக்கு திடுக்கென்றது. அவர் 'வைப்பு' சொன்னது என்பதற்காக மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கல்லாவில் இருந்து பணம் எடுத்து வாங்கி வைத்து இருக்கும் " ஹயர் எண்டு" மாடல் போனை எவனோ ஒரு சூர்யாவின் போன் என்றவுடன் ஒரு சிறிய எரிச்சல் ஏற்பட்டது.

" ஏ புள்ளே இது நான் துட்டு போட்டு வாங்கின போன்.."

" சரி அப்போ ஏன் சூர்யா நம்பரை வைச்சு இருங்கீங்க ?"

சிறிது சிறிதாக எரிச்சலின் உச்சத்திற்குச் சென்ற அண்ணாச்சி "நீ யாரு புள்ளை எவன் நம்பெரயோ நான் என்னத்துக்கு வைக்கப் போறேன் ?...இதே வேலையாப் போச்சு ஒரு நாளைக்கு இப்படி அஞ்சாறு பொட்டப் புள்ளைய போன் போட்டுக் கலாயிக்குது.வேற சோலிக் கழுதை கிடையாதா?"

"ஆமா நீரு பெரிய மம்முதக் குஞ்சுன்னு நினைப்போ ?"

அண்ணாச்சி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

" மம்முதக் குஞ்சா இல்லையானு தெரியாது ஆனா மகாப் பெரிய குஞ்சு வைச்சு இருக்கேன் .." பேசி முடிப்பதற்குள் எதிர் முனையில் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

பின் குறிப்பு - போன் செய்த பெண்ணுக்கு அண்ணாச்சியின் தொலை பேசியில் ஒலித்த பாடல் " நெஞ்சே நெஞ்சே" வா இல்லை 'குஞ்சே குஞ்சே' வா எனத் தோன்றிய சந்தேகம் பற்றி கடைசி வரையில் அண்ணாச்சிக்கு தெரியாமலே போய் விட்டது.

No comments: