Total Pageviews

Wednesday, October 12, 2011

ஆறாவது விரல்

ஆறாவது விரல்

அந்தப்
பிஞ்சுக் குழந்தையை
அந்த ஆறாவது விரல்
ஸ்பரித்த போது
சில நொடிகள்
குழ்ந்தை
ஆறாவது விரலாய் மாறியது.
ஆறாவது விரல் குழ்ந்தையாய்
மாறியது.

படுக்கும்போது பரத்தையாய்......

படுக்கும்போது பரத்தையாய்......

படுக்கும்போது பரத்தையாய்
இரு
என்றதற்கு
பதில் சொன்னாள்
'நீ பதி விரதனாய்
இருந்தால்'
நானும் என.
பதிவிரதனுக்கு
எப்படி பரத்தையின்
ஸ்பரிசம் தெரியும்
என எனக்கு
புரியவில்லை

Tuesday, August 16, 2011

வீழ் பொழுது

பிண ஊர்வலத்தில்
வீசி எறியப் பட்ட
மலர் ஒன்று
காலடிகள் பட்டு
கசங்கிய நிலையில்
என்னைப் பார்த்துக்
கேட்டது
"நான் இப்படி
இருக்க
உனக்கு
உசிதமா என்று?'.

Monday, August 15, 2011

ஆலிலை முத்தம்



உதிர்ந்து கொண்டு இருந்த
ஆலிலை மேலே
ஒட்டி இருந்த
ஒரு நீர்த் துளி கேட்டது.
"நீ முதலில் விழுவாயா
இல்லை நான் முதலில் விழுவேனா?".
"இப்போது அது இல்லை என் கவலை.
நான் முதலில் விழுந்து
நீ என் மேல் விழுந்தால்
நான் தாங்கிக் கொள்வேன்.
நீ முதலில் விழுந்து
நான் உன் மேல் விழுந்தால்
நான் உன்னைக் கொல்வேன்.
தனி தனியாய் விழுந்தால்
நீ உரு மாறுவாய்
நான் சிதைவேன்.
என்ன செய்வது?"
என்றது கவலையுடன்.

சிறிது நேர சிந்தனைக்குப்
பின்
இரண்டும் ஒன்றை ஒன்று
ஆரத் தழுவி
முத்தமிட்டுக் கொண்டன.

Wednesday, December 22, 2010

மழைக்கு முன்னே

மழை
வருமா வராதா என
அறிய முடியாதவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வரும் என
உறுதியாக உணர்ந்தவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வராது என
நம்பியும்
எடுத்து செல்பவர்களின் குடை
அனைத்தையும் அமைதியாக
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தது
பெய்வோமா
பெய்ய மாட்டோமா என
அறியாத அந்த .மழை.
குடை விற்பவனோ
குடை இல்லாமல் வருபவர்களை
எதிர் நோக்கி இருந்தான்
குடும்பக் கவலையோடு.

Tuesday, December 21, 2010

வழுக்கும் வட்டம்

சில விடையே தெரியாத
கேள்விகள்.
சில கேள்விகளே இல்லாத
விடைகள்.
என்னிடத்தில்
அவ்வப்போது.
குழம்பி இருந்த நான்
இரண்டையும்
பொருத்திப் பார்த்தேன்.
வாழ்கையின்
வழுக்கும் வட்டத்தின்
உள் மையப் புள்ளியை
உணர்வதாய்த் தோன்றியது .

Sunday, June 27, 2010

அண்ணாச்சி குஞ்சு

அண்ணாச்சி அன்று தன் மளிகைக் கடையில் கொஞ்சம் பிசியாகத்தான் இருந்தார்.அப்போது அலை பேசி " நெஞ்சே நெஞ்சே " என்ற பாடலை எதிர் முனைக்கு பாடிக் கொண்டே இங்கு துடித்தது.
" இங்கிட்டு .............மளிகைக் கடல் ஒனேர் ......... அண்ணாச்சி பேசுதேன் அங்கிட்டு யாரு?"
"சூர்யா இருக்காரா?' என்றது அழைத்த அந்தத் தேன் குரல்.( பெண் குரல் எனச் சொல்லத் தேவை இல்லை).

"நீங்க யாரு புள்ளை?"

" ம்ம்.... எங்க அப்பா அம்மா பொண்ணு " என்றது நக்கலாக எதிர் முனையில்.

அண்ணாச்சி அவ்வளவு சீக்கிரமாக பெண்களிடம் அதுவும் இளம் பெண்களிடம் கோபப் பட மாட்டார். எனவே " ஏ புள்ளை காலங் காத்தாலே கிருத்துருவம் பண்ணாதே ..என்ன வேணும் சொல்லு"

மறுபடியும் எதிர் முனையில் " சூர்யா இருக்காரா .நான் அவரோட பிரெண்டு .."

" இங்கன அப்படி யாரும் இல்லை " .

"பின்ன நீங்க ஏன் சூர்யா போன வைச்சு இருக்கீங்க அப்போ அவரு போனை சுட்டுப் புட்டியளோ " என்று மிமிக்ரி செய்தது .

அண்ணாச்சிக்கு திடுக்கென்றது. அவர் 'வைப்பு' சொன்னது என்பதற்காக மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கல்லாவில் இருந்து பணம் எடுத்து வாங்கி வைத்து இருக்கும் " ஹயர் எண்டு" மாடல் போனை எவனோ ஒரு சூர்யாவின் போன் என்றவுடன் ஒரு சிறிய எரிச்சல் ஏற்பட்டது.

" ஏ புள்ளே இது நான் துட்டு போட்டு வாங்கின போன்.."

" சரி அப்போ ஏன் சூர்யா நம்பரை வைச்சு இருங்கீங்க ?"

சிறிது சிறிதாக எரிச்சலின் உச்சத்திற்குச் சென்ற அண்ணாச்சி "நீ யாரு புள்ளை எவன் நம்பெரயோ நான் என்னத்துக்கு வைக்கப் போறேன் ?...இதே வேலையாப் போச்சு ஒரு நாளைக்கு இப்படி அஞ்சாறு பொட்டப் புள்ளைய போன் போட்டுக் கலாயிக்குது.வேற சோலிக் கழுதை கிடையாதா?"

"ஆமா நீரு பெரிய மம்முதக் குஞ்சுன்னு நினைப்போ ?"

அண்ணாச்சி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

" மம்முதக் குஞ்சா இல்லையானு தெரியாது ஆனா மகாப் பெரிய குஞ்சு வைச்சு இருக்கேன் .." பேசி முடிப்பதற்குள் எதிர் முனையில் தொடர்பு துண்டிக்கப் பட்டது.

பின் குறிப்பு - போன் செய்த பெண்ணுக்கு அண்ணாச்சியின் தொலை பேசியில் ஒலித்த பாடல் " நெஞ்சே நெஞ்சே" வா இல்லை 'குஞ்சே குஞ்சே' வா எனத் தோன்றிய சந்தேகம் பற்றி கடைசி வரையில் அண்ணாச்சிக்கு தெரியாமலே போய் விட்டது.

Thursday, June 17, 2010

நீள் சதுரம்

நீள்சதுரத்திற்குள்

எத்தனயோ குட்டி

வட்டங்களைப் பொருத்திப்

பார்த்து விட்டேன்

இன்னும் வெறுமை

உள்ளது

என் மனதைப் போலவே.

மௌனம்

இருவருக்கும் இடையிலான

இந்த நீண்ட மௌனம்

என்னை வதைக்கிறது

என்று குற்றம் சாட்டினாய்

இந்த வேளையில்

நீயும் மௌனமாய்

இருந்ததை

அறிந்தா அறியாமலா?

Thursday, June 10, 2010

மொழிப் பிரச்சினை

அழைத்துக் கொண்டு வந்த

' அவளிடம் 'படு' என்றேன்.

அவள் ஏதோ ஒரு

பாடலை முணுமுணுக்கத்

தொடங்கினாள்.

தமிழ் கொஞ்சமே தெரிந்த

அந்தத் தெலுங்குப் பெண்ணை

அழைத்து வந்தது

அறியாமையோ எனத் தோன்றியது

நிர்வாணம்

அலைபேசியில் அழைத்து
'என்ன செய்கிறாய்? என்றாள்.
'ஆடைகளை உடுக்கப்
போகிறேன்' என்றேன்.
'என்ன நிலை?' என்றாள்.
"முழு நிர்வாணம்" என்றேன்.
'உடை உடலுக்குச் சுமை'
என்றேன் சலிப்புடன்.
'நிர்வாணம் பரிசுத்தம்'
என்றாள் சிலிர்ப்புடன்.
படுக்கையில் என்னை
எப்போதும் வெல்லும் அவள்
இன்று உடுக்கையிலும்.

Sunday, June 6, 2010

கேயாஸ் தியரி

நீ ஒரு வண்ணத்துப்பூச்சி.

நான் ஒரு சுனாமி.

கேயாஸ் தியரி

தெரியுமா கண்ணே?

உன் பெயர்

பூக்களின் பொதுக்குழு

போர்க்களம் ஆனது

உனது பெயரைத்

தன் பெயராய்

யார் சூடிக்

கொள்வதென.

Monday, December 14, 2009

குவார்ட்டர் பாட்டில் ..........பாட்டில் ஆன கதை

அலை பேசி அழைத்தது .கதை சொல்லிதான்.ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான். எனினும் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் எடுத்துப் பதில் சொன்னேன்.

"என்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன் .

"சும்மா நம்ம கிராமத்துல போய் இருந்துட்டு வந்தேன்."

எனக்கு மனதில் உள்ளூற உதறல்தான்.கேட்டே விட்டான்.

"நாம மீட் பண்ணலாமா ?" கேள்வி எழுப்பினான்.

பைக்குள் பார்த்தேன். பணம் இருந்தது ." சரி வா" என்றேன் .

" பார்ட்டி உண்டு இல்லையா ?". இல்லை என்றால் விடப் போகிறாயா என மனத்திற்குள் சபித்துக் கொண்டு " கட்டாயம் " என்றேன் .

வரலாற்று ரீதிக்கு 'வந்தான் வென்றான்' ( அதாங்க நல்லாக் குடித்தான்) . ஓர் அரை பாட்டிலைக் காலி செய்தவுடன் ஆரம்பித்தான் கச்சேரியை.

" கிராமம்னா கிராம்தான் " என ஆரம்பித்தான்,

உடனே " என்னப்பா கிராமம்னா கிராமம்தானே " என்றதற்கு
" என்ன நீ வாங்கிக் கொடுத்ததால நக்கலா ?" என முறைக்கத் துவங்கினான்.

உடனே அவனைக் கூல் செய்யும் விதமாக " இல்லப்பா உன்னை எதிர் பார்த்து வலைப் பூவில் ரசிகர்கள் காத்திகிட்டு இருக்காங்க. அதான் ....."

" அப்படிப் பேசப் பழகு. என் வெயிட் உனக்குத் தெரியும் இல்லே"

மனதிற்குள் உன்னை நான் எப்போது தூக்கிப் பார்த்தேன் என நினைத்துக் கொண்டேன்.

" தெரியாதா..நீ சொல்லு மாப்ளை "

" ஊர் ரொம்பக் கெட்டுப் போச்சு. இம்பூடூண்டு என் 'விர'த் தண்டி இருக்கற பயக்க எல்லாம் குடிக்க ஆரமிச்சுட்டான். நான்லாம் பிளஸ் டூ படிக்கைல ( சந்தடி சாக்குல ஒரு கப்சா ?) மொத மொத குடிக்க ஆரமிச்சேன் பயந்து பயந்து . அதவும் அஞ்சு வருஷம் கட்டிங் தாண்டல.இப்போ எல்லாப் பய புள்ளையும் 'ஹாப்' அடிக்கு. ஏ.. உனக்கு அந்த மண்டபம் தெரியும் இல்ல. அங்கன தெனம் நைட் பாட்டில் பாட்டிலா ஓடுதுடே ."

நிறுத்தி என்னை உற்று நோக்கினான். அதன் பொருள் ' கிளாஸ் காலி ஆயிருச்சு டுபுக்கு ஊத்து' என்பது அவனுடன் பல வருடங்களாகக் குடிக்கும் எனக்குத் தெரியாதா என்ன?

"இந்தப் பயக்க டக்குனு 'ஐட்டி' பாருக்குப் போய் சரக்கு வாங்கிட்டு வந்துருதான். நம்ம " சிங்கம்' இருக்கு பாரு .அதுக்கு இதே வேலைதான் ... ஒவ்வொருத்தனுக்கும் தினம் வாங்கிக் குடுத்திட்டு ஒரு கட்டிங் கமிசன் அடிச்சுருதான்.....".

திடீரென்று அங்கும் எங்கும் பார்த்தவன் " என்ன மாப்ளை தீந்து போச்சா ?" என்றவன் நேராக பிரிட்ஜ் பக்கம் போய் திறந்து உள்ளே உள்ள புது பாட்டிலை எடுத்துக் கொண்டே " ஏன் மாப்ளைனா மாப்ளைதான் எனக்குத் தெரியும் வே..நீர் உள்ள வைச்சு இருப்பீர்னு...இரும் ..ஒரு தம் அடிசுகிடுதேன் "

பற்ற வைத்து ரெண்டு மூன்று இழுப்பு இழுத்து விட்டு பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.எனக்குப் பகீர் என்றாகி விட்டது.

" ஒரு சேதி சொன்னா நீரும் விழுந்து விழுந்து சிரிப்பேறு. நம்ம ஊர்ல ரவுண்ட் ஜட்டி போட்ட பாதி பயக்க ரெண்டு பை வச்ச நீள ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான். ஜட்டி போடாத பயக்க ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான்".

எனக்கு 'என்ன டிராக் மாறுகிறதே...மப்பாகி விட்டானா ' எனத் தோன்றியது . அவனாவது அவ்வளவு சீக்கிரம் மப்பு ஆவதாவது .

"சில சமயம் ரெண்டு மூணு 'கோட்டார்' வாங்க வேண்டி வருதா ....கையில கொண்டு வந்தா சிக்கல்னு ஜட்டி பாக்கெட் உள்ள வச்சுக்கிட்டு வந்துருதானுவே.....ஜட்டி போடலையுனா இடுப்புல சொரிகின
'கோட்டார்' கீழ விழந்தரும்னு ஜட்டி போட்டு அதுல சொருகி எடுத்துக்கிட்டு வாராங்க ...."

"அன்னைக்கு அப்படித்தான் நான் மண்டபத்தில ஏழு மணிக்கு உக்காந்து இருந்தேன். நம்ம 'சிங்கம்' வந்துது. நம்ம 'அடேங்கப்பா' ( பெயர்க் காரணம் - எதற்கு எடுத்தாலும் - அடேங்கப்பா சாப்பாடு என்னமா இருந்துது ...அடேங்கப்பா சினிமா எப்படி எடுத்து இருக்கான் ....அடேங்கப்பா என்னமா இருக்கு முலையும் குண்டியும்.....அடேங்கப்பா என்னமா போடுதான் ( நீலப் படம் பார்க்கையில்)......அடேங்கப்பா 'சிங்கத்துக்கு எம்புட்டு நீளமா கிடக்கு .....இத்யாதி இத்யாதி ) புல் மப்புல இருந்தான். சிங்கம் வந்த உடனே 'ஏல சிங்கம்' மரியாதையா லுங்கிக்கு உள்ள உள்ள 'கோட்டரைக் குடுல ' ன்னான். சிங்கம் 'அண்ணே' ஒண்ணும் இல்லை" ன்னான். இவன் விட மாட்டேங்கான்....'ஏல மரியாதையா அண்ணனுக்குத் தாரியா ..இல்ல "னு லுங்கிய இழுக்கப் போனான். அவன் லுங்கியக் கெட்டியா புடிச்சிகிட்டே ' தூர விடுங்கண்ணே' ன்னான்.இப்படியா பத்து நிமிஷம் இவன் இழுக்க அவன் தடுக்க .....ஒரே களேபரம்தான்."

சொல்லிக் கொண்டே வந்தவன் அமைதியானான். திரும்பிப் பார்தால்
பாட்டிலும் காலி அவனும் காலி.

எனக்கோ கதை பாதியில் நிற்கிறதே என எழுப்ப முயற்சித்தேன் அவனை. முடிய வில்லை. நானும் தூங்கிப் போனேன்

பின் குறிப்பு- காலையில் எழுந்ததும் கண்ணில் பட்டது என் தலை மாட்டில் ஒரு காகிதம்.அதில் - "இப்படி சண்டை அவங்க ரெண்டு பேரும் போட்டதால எனக்கு மண்ட காஞ்சு போச்சு. கோவம் வந்து " ஏல பேக் கூதிபாத்து...பத்து நிமிசமா அங்கனேயே கைய வச்சு நொரை நாட்டியம் பண்ணுதியே....'கோட்டர்' பாட்டில் 'பீர்' பாட்டிலாயிராப் போவுது'னு கிளம்பி வந்துட்டேன்.-என்று எழதி வைத்துப் போய் இருந்தான்.

அவசியம் இல்லாத செய்தி- இடையில் அவன் " தினம் நம்ம கிட்ட ' எழுவது' ரூவாயை வாங்கிட்டு மாசத்துக்கு 'ஒரு ரூவாய்க்கு' அரிசி போடுதான்.அந்த ஒரு ரூவா அரிசியத் தின்னுட்டு கக்கூசுக்குப் போனா நாலு ரூவா கேக்கான்' சொன்ன அரசியல் பொருளாதார சித்தாந்தம் நமக்குத் தேவை இல்லாதது.