'சொர்க்கத்தில் இருக்கிறேன்'
என்றான்
அலை பேசியில்
அழைத்த போது.
ஆச்சர்யமாய்
'அதற்குள்
அமரராய் விட்டாயா
அப்படி ஆயினும்
உனக்கு
அந்த வாய்ப்புக் கிட்டாதே?'
என்றேன்.
‘இல்லை அந்தப் பெயரில்
உனது ஊரில்
ஒரு பாரும்
இல்லையே'
என்றேன்.
‘இல்லை இது வேறு வழியில்'
என்றான்.
மயக்கத்தில் இருந்தது
அவன் குரல்.
'மது,மயக்கம்,மங்கை,மணம்
இதுவே இங்கு'.
‘எந்த இணைய தளம்
வழியாகப் பதிவு செய்தாய்?'
'இல்லை இதய தளம்
வழியாக'
‘கடவுச் சொல் உண்டா?'
‘காதல் அடிக்கோடு காமம்'
'இப்போது என்ன செய்கிறாய்?'
‘இடை வேளை'
‘எங்கு அமர்ந்து இருக்கிறாய்?'
‘அவளின் அகன்ற அடி மடியில்'
‘இந்திரனின் இருக்கை
என்ற எண்ணமா?'
‘இருக்கலாம்
அவளின் இரு
முலைகளில்
இரு கை
ஊன்றி
இருக்கையில்
அப்படித்தான் தோன்றுகிறது.'
‘தாகம் எடுத்தால்?'
‘அவளின் இனிய இதழ்'
‘மோகம் கொண்டால்?'
‘அவளின் முழு உடல்'
'சரி இடை வேளை
முடிந்தது அடுத்த
ஆட்டத்துக்கு
தயாராகிறேன்'
எனத் துண்டித்தான்.
அது சரி
அலை பேசி
இணைப்புக் கொடுக்கையில்
சொர்க்கத்திற்கும்
அழைக்க முடியும் என
அவர்கள்
சொல்லவில்லையே!
7 comments:
அடங்க மாட்டேங்கறியே நீயி...
முதல் பதிவுக்கு நன்றி.
அடக்கம் அமரருள் உய்க்கும் - அடங்காமை
அங்கங்கே உய்த்து விடும்
மென்மேலும் சொர்கத்துக்கு இணைப்பு கிடைக்க வாழ்த்துக்கள்.
Interesting Poem!
மாம்பலம் மஜா ஆண்டி details please!
பெயரைச் சொல்லாமல் கேட்கிறீர்களே?
நியாயமா?
அன்புடன்
சூர்யா.
Unable to comment in your latest post concerning credit card defaulting. It is amazing that the bank people have spared you this long. Hope it is just a story.
Regards,
Dondu N. Raghavan
Post a Comment