Total Pageviews

Friday, October 17, 2008

***** கொண்டு இருக்கிறேன் ....போனை வையடா....புண்ணாக்கே.

கிரெடிட் கார்டு வாங்கும் போது இப்படி ஒரு வார்த்தைப் பிரயோகம் என் நாவில் இருந்து எழும் எனக் கனவில் கூட எண்ணியது இல்லை.என்னிடம் பல வங்கிகளின் கடன் அட்டைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஒரு குறிப்பிட்ட அட்டைக்கு குறிப்பிட்ட நாளுக்குள் குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த முடியவில்லை.

சிறிய வறுமையான சூழல். சரி அடுத்த மாதம் சேர்த்துக் கட்டி விடலாம் என இருந்து விட்டேன்.இந்தக் கவனக் குறைவு மூன்று மாதம் சென்றதால் இந்த அளவு போகும் என்று எண்ணவில்லை.

அன்று வழக்கம் போலவே காலை 7.15க்கு கிளம்பிப் பைக்கில் அலுவலகம் சென்று கொண்டு இருந்தேன்.வழக்கமாக நான் என் மொபைலை 'வைப்ரேஷன் மோடில்' போட்டு விடுவேன் பயணிக்கும் பொழுது. மேலும் எவரது போனையும் எடுப்பதும் கிடையாது. அன்று பை இல்லாத சட்டை அணிந்து இருந்தேன்.எனவே மொபைலைப் பேண்ட் பாக்கெட்டில் வைத்து இருந்தேன். வண்டி கிளம்பிப் பத்து நிமிடத்தில் எல்லாம் அதிர்வுடன் மொபைல் ஒரு 'எலி' மாதிரி நகரத் தொடங்கியது.தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு அதிர்ந்தது. அது இருந்த இடம் அப்படி என்பதால் குளிரில் 'காலையிலேயே' வேறு மாதிரியான உணர்வுகளைத் தூண்டியது. வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்திப் பேசினேன்.

“ மிஸ்டர் ................?”

“ யெஸ்”

”......வங்கியில் இருந்து பேசுகிறோம். தாங்களின் குறைந்த பட்ச திருப்பிச் செலுத்தும் தொகை கடந்த சில மாதங்களாக வரவில்லை.. எங்களுடைய வங்கி ஆளை இன்று அனுப்பிக் கலெக்ட் செய்து கொள்ளவா?”

“இன்று நான் வெளியூரில் இருக்கிறேன்.இரண்டு நாட்கள் வருவதற்கு ஆகும்.” இன்னும் இரண்டு நாட்கள் தள்ளிப் போடலாம் என்ற எண்ணத்தில்.

“ சரி. இரண்டு நாட்கள் கழித்துக் கூப்பிடுகிறேன்”.
இதற்கிடையில் என் மேல் சேற்றை வாரி இரைத்து விட்டுச் சென்றது ஒரு லாரி.
---------------------------------------------------------------------------------------------
இப்படியாகச் சில நாட்கள் சமாளித்து விட்டேன்.இதற்கிடையில் அந்த வங்கியின் எண்களைப் பெயருடன் எனது மொபைலில் சேகரம் செய்து விட்டேன். அதன்பின் அந்த எண்களில் இருந்து 'கால்' வந்தால் எடுக்காமல் சமாளித்து வந்தேன்.அப்படி எல்லாம் என்னை சும்மா விட்டால் நான் ஏன் இந்தப் பதிவை எழுதப் போகிறேன்?


அந்தச் சக பெண் பணியாளர் மிகவும் அழகானவர்.'அழகான உடை அணிந்து வரும் தினம்' போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக முதல் பரிசு வாங்கி வருபவள். அலுவலகத்தில் அனைவரது கனவிலும் குறைந்தது ஒரு முறையாவது வந்து இருப்பார்.அதில் 30% பேருக்காவது 'சொப்பன ஸ்கலிதம்' நிகழ்ந்து இருக்க வாய்ப்பு உண்டு.20 % பேர் தங்களது சுய இன்பத் துய்ப்பின் போது இவளைக் காரணமாக எண்ணி இருக்க வாய்ப்பு உண்டு.திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களது மனைவியைப் போகிக்கையில் இவளை நினைத்துப் போகித்து இருக்க வாய்ப்பு உண்டு.இதை எல்லாம் எழுதக் காரணம் அவளது அழகை விஸ்தாரமாக விவரிக்கும் பொருட்டே ஒழிய எனக்கு 'போர்னோ' எழுதும் எண்ணமோ, அறிவோ கிடையாது . அலுவலகத்தில் எல்லோரும் அவளுடன் 'கடலையோ,மொக்கையோ, பாவ்பாஜியோ ,பானி பூரியோ போடுவதில் போட்டி போடுவார்கள். நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன்.( தயவு செய்து என்னைப் பெர்சனலாக அறிந்தவர்கள் ‘கொஞ்சம் கூட கூசாமல் பொய் எழுதுகிறாயே' என்று மின் அஞ்சலோ இல்லை குறுஞ் செய்தியோ அனுப்பாதீர்கள்.).பாருங்கள் எதை எழுதப் போயெதை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.அந்த அளவு அவளது அழகு சிந்தனைகளைத் திசை திருப்பக் கூடிய ஆற்றல் உள்ளது என ஒரு முடிவுக்கு வருவோம்.அவள் ஒரு 'டேட்டா' வேண்டி என் இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்து புன்னகைத்தாள்.( இவளைச் சம்போகம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் புன்னகையைப் பார்த்துக் கொண்டே செய்ய முடியுமா?அப்போது புன்னகை வருமா?).' நான் டேட்டா கொடுத்தால் நீ டேட்டிங்கிற்கு டேட் கொடுப்பாயா? “ என்று கேட்டு மொழியில் விளையாடமுயற்சி செய்தேன் மனத்திற்குள்தான்.அந்த நேரத்தில் மேசை மேல் உள்ள போன் அடித்தது. அவளிடம் சிரித்துக் கொண்டே போனை எடுத்தேன்.

“.......வங்கியில் இருந்து பேசுகிறோம்” என வழக்கமான பல்லவி ஆரம்பம் ஆகியது.எனக்கோ தர்ம சங்கடமான சூழல்.சில முறை சீட்டுக்கட்டு போல நான் அட்டைகளை வைத்து இருப்பதை அதிசயத்துடன் பார்த்து உள்ளாள்.

“ நான் இப்பொழுது ஒரு மிக முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்.சிறிது நேரம் கழித்து அழைக்க முடியுமா?”

” கடந்த சில தினங்களாக நீங்கள் எங்களது 'கால்களை' அட்டெண்ட் செய்ய மறுக்கிறீர்கள்.எப்பொழுது பணம் கட்டப் போகிறீர்கள்?”

இப்படியாக உரையாடல் தொடர்ந்தது. இதற்குள் தேவதை “ தாங்கள் பிசியாக இருப்பதாக எண்ணுகிறேன். பிறகு வருகிறேன்” என்று கிளம்ப , நானோ 'தேவதை வந்த நேரம்' 'தேள் கொட்டிய நிலையினை' உணர்ந்தேன்.எதிர் முனையிலோ 'பீட்' செய்த ப்ரோக்ராம் போலப் பேசிக் கொண்டே போனான்.
இதில் என்ன பெரிய சிக்கல் என்றால் நான் கட் செய்தாலும் தொடர்ந்த்து தொல்லை கொடுப்பார்கள். எனது அலுவலகத்தின் கடுமையான விதிகளுள் ஒன்று எந்த தொலைபேசியும் மூன்றாம் முறை ஒலிப்பதற்குள் எடுக்க வேண்டும்.


” சரி.இன்னும் இரு தினங்கள் கழித்து ஆள் அனுப்பவும்”.

“ இல்லை. இன்று கடைசி நாள்.கட்டாயம் பணம் கட்டவும். எங்கு வந்து கலெக்ட் செய்ய? வீட்டிலா...அலுவலகத்திலா?எந்த நேரம் வரட்டும்?”
இதற்குள் தேவதை சிரித்த நமட்டுச் சிரிப்பு என் நிலைமை அவளுக்குத் தெரிந்து விட்டதோ எனக் கவலை வரவும் கோபம் உச்சிக்கு ஏற எதிர் முனையில் ஏதோ கத்தி விட்டு திரும்பிப் பார்த்தால் தேவதை வைத்து விட்டுச் சென்ற துண்டுச் சீட்டில் “ மெயில் பண்ணுகிறேன் ” என்ற வாசகம் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.தேவதைகள் எதன் பொருட்டும் யார் பொருட்டும் காத்து இருப்பதில்லை போலும்!
------------------------------------------------------------------------------------------------
அலுவலக வேலையாக சென்னைக்கும், பெங்களூருவுக்கும் செல்ல வேண்டி வந்தது. சென்னையில் ஒரு முக்கியமான சந்திப்பில் இருந்த போது மீண்டும் மொபைல் ஒலிக்கத் தொடங்கியது. இப்போது எல்லாம் மொபைல் ஒலிக்கத் தொடங்கினாலே ஒரு வித 'போபியா' வரத் தொடங்கி விட்டது.

நல்லவேளை......அந்த வங்கியின் நம்பர் இல்லை.தைரியமாகப் பேசத் தொடங் கினேன்.


ஒரு பெண் குரல். ”மிஸ்டர் .............. ?” .இனித்தது.

“ஆம்”.


“ தாங்கள் எங்கு இருக்கிறீர்கள்?”.ரோமிங் சார்ஜ் ஏறும் எனத் தெரிந்தாலும் ”சென்னையில்” என்றேன்.

” தாங்கள் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றி வருகிறீர்கள். இன்றைக்குள் கட்டாயம் செலுத்த வேண்டும்.” என்றாள் கடுமையான குரலில்.( இரண்டு வரிகளுக்கு முன்னால் இனித்த குரல் இப்போது வேறு விதமாய்த் இப்போது தோன்றுவது மனித இயல்பினாலா இல்லை உண்மையிலேயே அவளது குரலே மாறி இருந்ததா என்று இனம் அறிய முடியவில்லை.).
நம்பரை மறுபடியும் பார்த்தேன். இந்த முறை வேறு நம்பர்.என் டெக்னிக்கைக் கண்டு பிடித்து விட்டார்கள் போல உள்ளது.

” நான் வெளியூரில் இருப்பதால் வந்த உடன் கட்டுகிறேன்.”


” வாய்ப்பு இல்லை. . உடனடியாக மும்பையில் ஏற்பாடு செய்யுங்கள். இல்லை சென்னையில் இடத்தைத் தெரிவியுங்கள். ஆள் அனுப்புகிறோம்.”

“இன்னும் இரண்டு நாட்களில் நான் மும்பை வந்து விடுவேன்”.

“ இங்கு உங்கள் வீட்டில் மனைவியிடம் ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.” இதை அவள் இந்தியில் சொன்னாள். எனக்கோ இந்தி தெரியாது.இதை தமிழில் மொழி பெயர்த்தால் கொஞ்சம் விவகாரமான பொருள் வரும் போலத் தோன்றியது.

“ என்னிடம் வசூல் பண்ணுவதாக இருந்தால் இரண்டு நாட்கள் பொறுக்க வேண்டும்.இல்லை என் மனைவியிடம்தான் வசூல் செய்ய வேண்டும் என்றால் இரண்டு வாரங்களோ .. இரண்டு மாதங்களோ ... இரண்டு
வருடங்களோ பொறுக்க வேண்டும்.ஏன் எனில் எப்போது திருமணம் செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை .” என்றேன் நக்கலாக.அனேகமாக இந்த வாக்கியம் அவளை லேசாகக் கோபப் படுத்தி இருக்க வேண்டும்.

“ சென்னையின் எந்த மூலையில் இருந்தாலும் சொல்லுங்கள்.இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஆள் அனுப்பிகிறேன்' என்று தமிழ்ப் பட வில்லன் ரே ஞ்சிற்குப் பேசினாள். கவனமாக விகுதியைப் பார்க்கவும்.

“ வேலை முடிந்ததும் “ மாம்பலம் மஜா ஆண்டி”( இவர் குறித்து விவரம் வேண்டுவோர் தனியாக மின் அஞ்சல் செய்யவும்.) வீட்டுக்குப் போவதாய் இவளிடம் சொல்லலாமா கூடாதா எனப் புரியவில்லை. ஒரு வேளை அங்கு எல்லாமா ஆள் அனுப்புவார்கள்?.கார்ட் அப்ளை செய்யும்போது விண்ணப்பத்தைப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்ட என்னையே நொந்து கொண்டேன்.

இப்படி யோசித்துக் கொண்டு இருக்கையில் “ மிஸ்டர்...உங்களிடம்தான் பேசிக் கொண்டு இருகிறேன்.பதில் சொல்லுங்கள்.” மிரட்டலாய்.எனக்கு சின்னதாய் ஒரு கோபம் வந்தது.

“ மேடம்.. நானோ வெளி ஊரில் இருக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்.ரோமிங் சார்ஜ் வேறு ஏறிக் கொண்டே போகிறது.தயவு செய்து நான் மும்பை திரும்பியவுடன் கூப்பிடுங்கள்.”

அவள் மறுபடியும் முதலில் இருந்து 'பின் ஏன் செலவழித்தீர்கள்?பணம் கட்டாமல் விட மாட்டோம்.வீட்டிற்கும் , அலுவலகத்திற்கும் ஆள் அனுப்பி வைப்போம்”என்று நான் கவனிக்கிறேனா இல்லையா என்று தெரியாமல் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். வடிவேலுவுக்கும் சங்கிலி முருகன் அண்ட் கோவிற்கும் ஒரு தமிழ் படத்தில் நடக்கும் காட்சி இங்கே அரங்கேறிக் கொண்டு இருந்தது.

கடைசியாய் ‘உன் உள்கச்சை அளவு என்ன' எனக் கோபத்தில் கேட்டு
மொபைலை அணைத்து விட்டேன்.மண்டைக்குள் கும்முட்டி அடுப்பை ஏற்றியது போல இருந்தது.

மஜா ஆண்டியாவது..மயிராவது.....கடற்கரை கஜாவின் 'சுண்டல் கஞ்சியோ இல்லை ஒரு போத்தல் ரம்மோதான் சரிப்படும் எனக் கிளம்பினேன்.
-------------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் காலையிலே முடிவு செய்து விட்டேன். எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அவளுக்கு நானும் மன உளைச்சலை ஏற்படுத்த ஒரு ‘மாஸ்டர் பிளான்' ரெடி செய்தேன்.

அவளிடம் இருந்து போன் வந்தவுடன், ‘ விஜய்காந்த் ‘ பட அறிமுகப் பாடலை தேவா இசையில் மாணிக்க விநாயகமோ இல்லை நாகூர் ஹனிஃபாவோ பாடுவது போன்ற நிலையில்

‘வாராரு வாராரு
வன்புலியா வாராரு
வேல் எடுத்து வாராரு
வேங்கையாய் வாராரு
பொன்னு பொருள் தாராரு
பூமியில் தலைமகனாரு'

என்று தயார் செய்து வைத்த பாடலை மூச்சு விடாமல் பாட ஆரம்பிக்க
‘பாகல்' என்று கூறி வைத்து விட்டாள்.அன்று முழுவதும் காத்து இருந்தேன் ஏனோ போன் வரவே இல்லை. எனக்குச் சின்ன வருத்தம் என்ன என்றால் என் அனு பல்லவி சரணம் முழுவதைக் கேட்காமல் போய் விட்டாளே என்பதுதான்.
----------------------------------------------------------------------------------------------
ஒரு வழியாக அடுத்த மூன்றாம் நாளில் நடு இரவு விமானத்தில் மும்பை வந்து அடைந்தேன். வழக்கமாக 5.45 அதிகாலை எழும் பழக்கம் உள்ளவன். முந்தைய இரவு காலதாமதமாகத் தூங்கியதால் 6.30 மணி அளவுக்கு கதவு தட்டபடும் சத்தம் கேட்டுத்தான் முழித்தேன். வழக்கமாக குப்பைக்காரிதான் தட்டுவாள். எனவே குப்பை வாளியை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.
எதிரே இருவர். வாட்டசாட்டமான ஆகிருதி.புரிந்து விட்டது.


“ பே மெண்ட் டியூ” என்றான் இந்தியில்.

“ ஐயா எனக்கு உங்களிடம் பேசும் அளவில் இந்தி தெரியாது.எனவே பத்து
மணிக்கு நானே உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்கிறேன்' என்றேன் எனத் தமிழில்.அவனோ ‘பே மெண்ட் டியூ நவ்' என்பதைத் தவிர வேறு வார்த்தையே தெரியாது என்பது போல குரலை உயர்த்திக் கொண்டே போனான். அதிகாலை நேரத்தில் அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்த்தனர்.வழக்கம் போலவே என் வீட்டில் முன் தினம் வைத்த பாலை வாங்க வரும் அடுத்தாத்து மாமா கதவைத் திறந்து பார்த்தார். நிலைமையைப் புரிந்து ‘ நான் இன்னிக்கி கடுங் காப்பிதான்' என்று மறு படியும் கதவை தாளிட்டு உள்ளே சென்றார்.( எலி அடிக்கையில் பாதியில் சென்றாரே அதே மாமாதான்).

வந்தவர்களோ ஓரளவு தங்கள் குறிக்கோள் (அக்கம் பக்கத்தில் என்னை அவ்மானப் படுத்தி ஒரு முயற்சி செய்வது) நிறைவேறியதாய் நினைத்து மறுபடியும் ' பே மெண்ட்' பல்லவியை என்னிடம் தொடங்கினர்.நான் கதவை மூடி உள்ளே சென்று விட்டேன். கதவைத் தட்டினர்......இல்லை உடைக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில் மாமாவின் ஹீனக் குரலும் சேர்ந்து ஒலிக்கத் தொடங்கியது. கதவைத் திறந்தேன்.

‘மாமா( வயது அறுபதுக்கு மேல் இருக்கும்) ( அவர் என்னை) (என்ன கொடுமை இது மாமா- இது நான்) அவா எங்கிட்ட பைசா கேக்கறா?'

அவர்கள் ருத்ர தாண்டவம் ஆடியபோது கூட கோபம் வராத நான் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.‘ நீர் கடன் வாங்கி இருக்கேறா?'

‘இல்லை ..எங்காத்துக் கதவைத் தட்டி என் கிட்ட கேக்கறா'

‘பின்ன என்ன மசுத்துக்கு அந்தக் கூதிங்களுக்குப் பதில் சொல்றேர்?உம்ம வேலை மசுரப் பாத்துக்கிட்டுப் பொத்திக்கிட்டுப் போரும்”.

மாமா மயக்கம் போடாத குறைதான். நான் இப்படி எல்லாம் பேசுவேன் எனக் கனவில் கூட எண்ணி இருக்க மாட்டார்.


அந்த வங்கிக் குண்டர்களுக்கு நாங்கள் பேசியது புரியவில்லை. அவர்கள் என்னிடம் என் மனைவியை அழைக்கச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை உறைத்தது. என் மனைவி ஊரில் இல்லாதது. அவள் மட்டும் இப்போது இருந்திருந்தால்? வேறு என்ன விவாக ரத்துதான்.‘உங்கள் மனைவியை அழையுங்கள்' மறுபடியும் அவர்கள்.இந்திப் பட வில்லன்களும் தமிழ், தெலுங்கு பட வில்லன்கள் போல பணம் திருப்பித் தர முடியாதவர்களிடம் தமக்கையையோ, தாரத்தையோ வரச் சொல்லி இருப்பார்கள் போல இருக்கிறது. அதை வேறு இந்த வங்கிக் குண்டர்கள் பார்த்துத் தொலைத்து இருப்பார்கள் போல இருக்கிறது.

‘அவர் ஊருக்குச் சென்று உள்ளார்' எனக் கூறி கதவைத் தாளிட்டேன்.அவர்களும் சிறிது நேரத்தில் களப் பணியைச் செவ்வனே செய்த மன நிலையுடன் கிளம்பி விட்டனர். ஆனால் என் மன நிலைதான் என் மனைவியை எண்ணியவுடன்.....அவள் இன்னும் இரு தினத்தில் வர இருக்கிறாள்.....என்ன நடக்கும்? ஒரு வேளை அவள் வருவதற்குள் வீடு மாற்றி விடலாமா? அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காதே? அப்படி மாற்றினாலும் காரணம் கேட்பாளே?சிந்தனையுடன் அலுவலகம் கிளம்பினேன்.

வாசலில் அந்த தேவதை. முகமன் கூறினாள்.

‘ ஏன் முகம் சரி இல்லை?” என்றாள்.

‘என் மனவி ஊரில் இருந்து வருகிறார்கள்'

‘அடப் பாவி மனிதா?”

நான் சொன்ன நிலை வேறு. அவள் புரிந்து கொண்ட நிலை வேறு.
என்ன செய்ய? காலையே இப்படி ஆரம்பிக்கிறது என நொந்து கொண்டு உள்ளே சென்றேன்.


வழ்க்கம் போல் அழைப்பு. அதே பல்லவி. மிரட்டல்கள். இத்யாதி இத்யாதிகள்.
நான் ஞானி நிலைக்கு வந்த மாதிரி தோன்றியது.இப்போது எல்லாம் அந்த வங்கிப் பெண் பேச ஆரம்பித்தாலே ‘RP ராஜ நாயஹத்தின்' ‘(rprajanayhem.blogspot.com) விளக்கெண்ணையால் குண்டி கழுவிய உவமை ஞாபகத்திற்கு வரத் தொடங்கி விடுகிறது.

-------------------------------------------------------------------------------------------
மனைவி வரும் நாளும் வந்தது. நான் முன் ஏற்பாடாக விடுப்பு எடுத்து இருந்தேன். இடைப் பட்ட நாட்களில் பிரிவால் உடம்பும், வங்கிக் குண்டர்களால் மண்டையும் காய்ந்து இருந்தது. அதை விட முக்கியமான விஷயம் இந்த கடன் அட்டை விவகாரம் தெரிவதற்குள் 'மேட்டரை முடிந்த அளவு ‘ முடித்துக் கொள்ள வேண்டும் .ஒரு வேளை தெரிந்த பிறகு வாய்ப்புக் கிடைக்குமோ என்னவோ?


இயற்கையும் உதவி செய்தது. மதிய நேரமே வானம் மப்பும் மந்தாரமாக மாற மழை சுழற்றி அடிக்கத் தொடங்கியது.மனவியும் இயைந்தாள். கிளு கிளுப்பாகத் தொடங்கியது.உதட்டில் முத்தமிட்டு முடித்தவுடன் செல் போன் ‘எமனாய்' ஒலி எழுப்பினான். எந்த வங்கியின் எண்ணும் இல்லை. என் அலுவலக எண்ணும் இல்லை. கை நடுங்கியது. பேசினேன். அந்தக் குண்டர்களேதான். வேறு ஒரு எண்ணில் இருந்து.
ஆரம்பித்தான்.


“அலுவலத்திற்கு அழைத்து இருந்தோம். நீங்கள் வரவில்லை எனச் சொன்னார்கள். எங்கு இருக்கிறீர்கள்?”.

இதற்குள் மனைவி வாகாகப் படுத்துக் கொண்டாள்.

' நான் வீட்டில் முக்கியமான வேலையாக இருக்கிறேன்.”

‘இப்போது ஆள் அனுப்பவா”

ஆடை நெகிழ்த்தினாள்.

“இல்லை நான்தான் சொன்னேனே முக்கியமான வேலை என்று”

'யாரது ?” காலை அகற்றியவாறே என் மனவி கேட்டாள்.

‘பணம் தாரமல் என்ன முக்கியமான வேலை?”

‘புணர்ந்து கொண்டு இருக்கிறேன் போனை வையடா புண்ணாக்கே' . பொறிந்து தள்ளி விட்டு போனையும், மனைவியையும் அணைத்தேன்.

பின் குறிப்பு-
1- அவனுக்கு நான் தமிழில் நான் சொன்னது புரிந்ததோ
இல்லையோ , எனக்கு புரிந்தது கடன் அட்டையில் பாக்கி இருந்தால் மனவியைப் நிம்மதியாகப் புணர முடியாது எனபது.

2 இந்த லட்சணத்தில் என் கோவை நண்பர் ஒருவருக்கும், என்னைப் பத்து வயதில் காதலிக்க ஆரம்பித்து இன்னமும் காதலித்துக் கொண்டு இருக்கும் 'அவளின்' மகனுக்கும் அலை பேசி அன்பளிப்பதாகச் சொல்லி இருந்தேன்.
தினமும் பேசும் கோவை நண்பரிடம் பேசுவதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டேன் இதனால்.என்னைக் காதலிக்கிற பாவ்த்துக்கு தன் மகனுக்கு தானே வாங்கிக் கொடுத்து விட்டு நான் வாங்கிக் கொடுத்ததாக கூறி விட்டாள். இதில் இருவரும் கேட்ட மாடல் ஒன்று என்பது ஆச்சர்யமான தற்செயல்.


3 நேற்று இதை தட்டச்சு செய்கையில் மராத்தி நண்பர் இந்தword file name ஐ
'புணரும் பூஜாரி'( புணரப் போகிறேன் என்று தமிங்கிலத்தில் இருந்ததை) எனக் கொச்சையாக வாசித்தது வேடிக்கையாகவும், மன நிறைவாகவும் இருந்தது.

ஒரு நிமிடம்.........ஒரு குறுஞ் செய்தி வந்து உள்ளது...வாசித்து விட்டு வருகிறேன்............................................................................................................................................................................................................................................................................................................

CONGRATS YOUR ............... BANK NEW CREDIT CARD APPROVED. என்ன கொடுமை சார் இது நான்தான் apply பண்ணவே இல்லையே.

காமம் ஆதி கடவுள் மீதி


கடவுளா? காமமா?
ஒரு கணத்தில்
சிக்கல் எழுந்தது.
காமத்தையே
கடவுளாகக் கொண்டவரைக்
கண்டுருக்கிறேன்.
கடவுளைக்
காமமாய்க் கண்டவரைக்
கண்டதில்லை.
கடவுள் பேரின்பம்
காமம் சிற்றின்பம் எனில்
கடவுள் பெரிய காமமா?
காமம் சிறிய கடவுளா?
குழம்பித் தவித்துக்
கண்ணுறங்கினேன்.
கனவில் தினமும்
வரும் கடவுள்
அன்று தாமதமாய்
வந்தார்.
தளர்ச்சியாயும் இருந்தார்.
ஏன் என்று
கேட்ட போது
காமத்தால் சிறிது
களைத்திருப்பதைக்
காரணமாய்ச் சொன்னார்.

Friday, October 10, 2008

சொர்க்கத்திற்கு அழைப்பு

'சொர்க்கத்தில் இருக்கிறேன்'
என்றான்
அலை பேசியில்
அழைத்த போது.

ஆச்சர்யமாய்
'அதற்குள்
அமரராய் விட்டாயா
அப்படி ஆயினும்
உனக்கு
அந்த வாய்ப்புக் கிட்டாதே?'
என்றேன்.

‘இல்லை அந்தப் பெயரில்
உனது ஊரில்
ஒரு பாரும்
இல்லையே'
என்றேன்.

இல்லை இது வேறு வழியில்'
என்றான்.
மயக்கத்தில் இருந்தது
அவன் குரல்.

'மது,மயக்கம்,மங்கை,மணம்
இதுவே இங்கு
'.

‘எந்த இணைய தளம்
வழியாகப் பதிவு செய்தாய்?'

'இல்லை இதய தளம்
வழியாக
'

‘கடவுச் சொல் உண்டா?'

காதல் அடிக்கோடு காமம்'

'இப்போது என்ன செய்கிறாய்?'

இடை வேளை'

‘எங்கு அமர்ந்து இருக்கிறாய்?'

அவளின் அகன்ற அடி மடியில்'

‘இந்திரனின் இருக்கை
என்ற எண்ணமா?'

இருக்கலாம்
அவளின் இரு
முலைகளில்
இரு கை
ஊன்றி
இருக்கையில்
அப்படித்தான் தோன்றுகிறது
.'

‘தாகம் எடுத்தால்?'

அவளின் இனிய இதழ்'

‘மோகம் கொண்டால்?'

அவளின் முழு உடல்'

'சரி இடை வேளை
முடிந்தது அடுத்த
ஆட்டத்துக்கு
தயாராகிறேன்
'
எனத் துண்டித்தான்.

அது சரி
அலை பேசி
இணைப்புக் கொடுக்கையில்
சொர்க்கத்திற்கும்
அழைக்க முடியும் என
அவர்கள்
சொல்லவில்லையே!

Friday, September 26, 2008

காமப் பெரு மூச்சு



ஒரு துளி.
ஓராயிரம் மீன் குஞ்சுகள்.
ஒன்று மட்டும்
முட்டி மோதி ஜெயிக்கிறது.
காலத்தின் ஜனனம்.
ஒரே உணர்வு.
ஓராயிரம் ஏக்கங்கள்.
ஒன்று கூட
கிட்ட வில்லை நேரத்தில்.
காமத்தின் மரணம்.

Wednesday, September 17, 2008

ராசி பலன்.

எனக்குப் பொதுவாக ராசிபலன், ஜோதிடம் போன்றவற்றில் அதிக அளவு நம்பிக்கை உண்டு. நான் தினமும் அதிகாலை தொலைக் காட்சியில், மற்றும் தின, வார, மாத இதழ்களில் வரும் ராசி பலன்களைப் பார்த்து, படித்து பின் பற்றுவது வழக்கம். உதாரணத்துக்கு இன்று என்ன கலர் அதிர்ஷ்டம் என்று சொல்லப் படிகிறதோ அந்த வண்ண ஆடைகளை அணிவது என் வ்ழக்கம். மேலும் அன்று பெண்களால் சிக்கல் வரும் என்று சொன்னால் வழியில் ‘
லிப்ட் ' கேட்கும் பெண்களுக்கு நிற்க மாட்டேன். அலுவலகத்தில் “பெண்களைப் ‘பாரா மடந்தையாக இருப்பேன்.

இந்த வாரம் இரண்டு வேறு இதழ்களில் ஒரே கால அளவுக்கான என் பணி குறித்து வந்த ராசி பலன் இதோ.

இரண்டுமே 'கு' வில்தான் ஆரம்பிக்கும்.இரண்டுமே வார இதழ். ஒன்று ஜோதிடத்திற்கென்றே வரும் வார இதழ்.

ஒன்றில்-' இந்தக் கால கட்டத்தில் பணியில் பதவி உயர்வும், கூடப் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும், நல்ல முன்னேற்றமும், சம்பள உயர்வும், மதிப்பும் கூடும்' என்று போகிறது.

மற்றொன்றில்- 'பணியில் சிக்கல் மிகுந்த காலம் இது. உயர் மற்றும் சக பணியாளர்களின் எதிர்ப்புக்கு உள்ளாவீர்கள். அலுவல்கத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது' என்ற ரீதியில் போகிறது.

இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது- ஒரு முறை ஒரு பிரபலமான தொலைக் காட்சிக்கு தினசரி ராசி பலன் எழுதிக் கொடுக்கும் ஒரு பிரபல ஜோதிட சிகாமணி, பூஷண் இன்னும் என்ன எல்லாமோ போட்டிக் கொள்வார்-இவரும் பல முறை தொலைக் காட்சிகளில் வந்து உள்ளார்- இரவில் எங்களுடன் ஒரு முறை ‘தண்ணி' அடித்து விட்டு மட்டையாகி விட்டார். அதிகாலையில் அவரின் மொபைலில் அந்தத் தொலைக் காட்சியில் இருந்து அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால் மனுஷன் அசைய வில்லை. எனக்கு 'இன்று' அந்தத் தொலைக் காட்சியில் எப்படி தினப் பலன் சொல்லப் போகிறார்கள் என அறியும் ஆவல் கூடிக் கொண்டே இருந்தது. அந்த நேரமும் வந்தது. வழக்கம் போல ராசி பலன்களும் சொல்லப் பட்டன. அப்போதும் அந்தக் ‘காலத்தைக் கணிக்கும் கனவான்' முழிக்க வில்லை. அவர் எழுந்தவுடன் ஆவல் தாளாது கேட்டேன்.

”'Crisis Management' என்று கேள்விப் பட்டது இல்லையா? Very Simple. முந்தின தினங்களில் வேறு ஏதேனும் ராசிக்கோ, நட்சத்திரத்திற்கோ உள்ள பலனை மாற்றி வசித்து விட வேண்டியதுதான்.?”

“பின் உமக்கு எதற்கு சம்பளம் கொடுத்து வைக்க வேண்டும்?”

“அடி மடியிலேயே கை வைக்கிறாயே?”

“இல்லை சின்ன சந்தேகம் ...அதுதான்..” என்று இழுத்தேன்.

”ப்ராண்ட் அம்பாசிடர் கேள்விப் பட்டு இருக்கிறாயா. அது மாதிரி என்று வைத்துக் கொள்ளேன்.'

என் குறிப்பு- அது போகட்டும். எந்த ‘கு' வை நம்புவது?எந்த ‘கு' வை நமபாமல் இருப்பது? இதை பிழைத் திருத்தம் செய்கையில்தான் கவனித்தேன்.'கு' க்குப் பதில் 'கூ' என்று இருந்ததை. கவனிக்காமல் பதிவேற்றம் செய்து இருந்தால் 'அனர்த்தம்' ஆகி இருக்கும் இல்லையா?
எனக்கு நேரமே சரி இல்லை என எண்ணுகிறேன்.




Friday, September 12, 2008

பீஜம் சின்னது - உருவான கதை ( MAKING OF -PEEJAM SINNATHU)


அவனால் எனக்குப் பிரச்சனை வராத நாள் இல்லை. ஆனால் இந்த முறை இந்த ரூபத்தில் வரும் என எண்ணவில்லை.
நான் பதிவுகளுக்கு வழக்கமாக முன்,பின் அல்லது என் குறிப்புகள் போடுவது வழக்கம். நான் செய்த ஒரே தவறு 'பீஜம் சின்னது' 'அவனுடைய' முயற்சி என்பதைப் போட மறந்து விட்டேன். நேற்று நண்பர் 'ரமணி' வீ ட்டுக்குச் சென்ற போது என்னைத் தனியாக அவரது சகோதரர் அழைத்து 'உங்கள் பீஜம் சின்னதா? எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் உள்ளார்' என்ற ரீதியில் ஆரம்பித்து விட்டார்.எனக்குத் தர்ம சஙகடம் ஆகி விட்டது. 'இல்லை ஐயா .எனக்குத் தேவையான அளவு வளர்ந்து உள்ளது' எனத் திறந்து காண்பிக்கவா முடியும்?
அவன் இன்று வந்தவுடன் மேற்கண்ட நிகழ்வைச் சொல்லி அவனிடம் கேட்டேன்.
” ஏன் இந்த விபரீத முயற்சி மேற் கொள்கிறாய்?பேசாமல் 'ஜ்வரோம் சுந்தருக்கு' ஒரு அதீதன் போல எனக்கு நீ இருந்து விட்டுப் போயேன்? கதைகளை, நிகழ்வுகளை மட்டும் சொல்லி விட்டுப் போயேன். நாங்கள் எழுதிக் கொள்கிறோம்.'
‘ஏன் என்னால் எழுத முடியாதா? உனக்குப் பொறாமையா?'
இவனுடன் பேச முடியாது.' சரி உன் சொந்த அனுபவமா அது?' என்றேன்.
” நீங்கள் எல்லாம் சொந்த அனுபவத்தைதான் எழுதுகிறீற்களா? நீ ‘
ராஸ லீலா' தந்தாய் அல்லவா? அதைப் படிக்கையில் 'பீஜம் சின்னது' என இரண்டு இடத்தில் வரும். சில வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் படித்த உடன் ‘பச்சக்கென' மனதில் ஒட்டிக் கொள்ளும். உள்ளூர் தமிழ் பேப்பர் ஞாயிறு அன்று வாங்கிப் படித்தேன்.குறியை நீட்ட, உச்சம் அதிகரிக்க, கள்ளக் காதலை விடுவிக்க, வசியம் வைக்க இப்படி ஏகப் பட்ட விளம்பரங்கள். இரண்டு புள்ளிகளையும் இணைத்தேன். அவ்வளவுதான்.'
‘சரி' என்றேன்.
திடீரென நினைவுக்கு வந்தவனாக 'உனக்கு பீஜம் எப்படி?' என்றான்.
‘இப்ப ரொம்ப அவசியம் இது. நான் பிரம்மச்சாரி எனபதையும் இன்னும் கன்னி கழியாதவன் என்பதையும் மறந்து கிளறுகிறாய். உன் போல பூத்த முல்லையோ இல்லை ஒரு பூசணிக்காயோ இல்லை முதிர் கன்னியோ இல்லை முட்டைக் கோஸோ முதலில் கிடைக்கட்டும். அப்புறமாய் என் விஷயம் பற்றிச் சொல்கிறேன்' என்றேன் எரிச்சலுடன்.
அப்புறமாக பல விஷயங்கள் பேசி விட்டு கிளம்புகையில் கேட்டான்.'இதை பதிவேற்றம் செய்யப் போகிறாயா?'
‘செய்யலாம் என்று இருக்கிறேன்.'
‘என்ன தலைப்பு வைக்கப் போகிறாய்?'
‘இன்னும் யோசிக்கவில்லை.'
‘பேசாமல் MAKING OF PEEJAM SINNATHU' என்று வைத்து விடேன்.'
நான் மவுனமாக முறைத்துப் பார்த்தேன்.
‘ஏன் ரஜினி, கமல், சங்கர் படங்களுக்கோ இல்லை பிரபல ஆங்கிலப் படங்களுக்கோ மட்டும்தான் Making of இருக்க வேண்டுமோ?'என்று கூறி விட்டுக் கிளம்பினான்.

Thursday, August 28, 2008

பீஜம் சின்னது

என் சக மாணவனின்
பீஜத்தை நேரில் பார்க்க
நேர்கையில்தான்
எனக்குத் தெரிந்தது
என் பீஜம் சிறிது என்று.
*************************************
இவனுக்கு மட்டும்
எப்படி இப்படி
என்ற வியப்பும்
எனக்கேன் இப்படி இல்லை
என்ற பயமும்
எப்படியும் வளரும்
என்ற நம்பிக்கையுடன்தான்
நான் வளர்ந்தேன்.
அது இல்லை.
****************************************
பின்னாட்களில்
கொக்கோகப் புத்தகத்தில்
குறிப்பிடப் பட்ட
அதன் அடர்த்தி
குறித்துப்
பயம் கூடின.
நண்பர் குழாமின்
நீளம் தடிமன் பற்றிய
ரகசிய உரையாடல்கள்
என் நிம்மதியைக் கெடுத்தன.
சிவராசர் முதல்
காளிதாஸ் வரை
செல்ல வெட்கமாய் இருந்தது.
ஆஸ்திரேலியாவிலிருந்து
வந்த எந்திரம் மூலமாக
அரை மணி நேரத்தில்
ஆறு இஞ்சு
கூட்டலாம்
என்ற விளம்பரம் லேசாக
மனதை அசைத்துப் பார்த்தது.
தினசரி அளந்து பார்க்க
அரை அடி ஸ்கேல் வாங்கி
பின் முழு அடி ஸ்கேல்
வாங்கினேன் நம்பிக்கையோடு.
கண்ணாடியில் பார்க்கும்போது
எல்லாம் எதிரி
மனப் பான்மையுடன்
பார்த்தேன்.
பெண் தோழிகளோடு
பழகுவதைத் தவிர்தேன்.
அண்டை வீட்டு
வயதான கிழவனின்
இளம் மனைவியின்
அழைப்பை
நிராகரித்தேன்.
***********************************
காலம் உருண்டு
ஓடியது.
நானும் எப்படியோ
கன்னி கழிந்தேன்.
**************************************
அந்தப் பதிமூன்று வயது
பூத்த முல்லையும்
முப்பத்தைந்து வயது
முதிர் கன்னியும்
என் உச்சி மயிரைப் பிடித்து
மேல் எழும்பி
உச்சத்தில் உன்மத்தத்தில்
என் பெயரை
உச்சரித்து
இன்னும் இன்னும்
என்று
தன்னிலை மறந்து
பிறழ்ற்றிய போது
பீஜம் சின்னது ஆனால்
பேசும் என்னுது
என்னும் கவிதை வரி
தோன்றியது.
***********************************

Tuesday, August 26, 2008

இலக்கிய தாகமா இல்லை கொலை வெறியா?



ஞாநியின் எழுத்துப் பட்டறையில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து விளக்குவதற்காக மும்பை நண்பர் ரமணிக்கு போன் செய்தேன்.
எடுத்தவுடன் " புல் டைட்டா?" என்றார்.
" ஐயா நான் மிக மிக அரிதாக மது அருந்துபவன்.அதிலும் பீர் தாண்டாப் பிள்ளை நான்"
" அதுதான் சாருவின் நிகழ்ச்சியில் நடந்ததை ஸ்ரீநிவாசன் எழுதி இருந்தாரே”.
“அதன் பின் சாருவும் எழுதி இருந்தாரே அதைப் படிக்க வில்லையா ? அதுவும் இல்லாமல் உச்சத்திற்கும் போகாமல் கீழேயும் விழாமல் சம நிலையில் இருந்ததை ஸ்ரீநிவாசன் 'FLAT' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார். ”
” அது போகட்டும். மும்பையின் தின வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் சேர்த்து இரு திரட்டாக வெளியிட ஒரு திட்டம் உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் மும்பை நகரின் 'பார்' கலாச்சாரம் பற்றிய பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள்.”(பரவாயில்லை. வேறு தலைப்புக் கொடுக்காமல் இருந்தாரே.)
எந்த மாதிரி வர வேண்டும் என ஒரு வடிவம் கொடுத்தார்.”வெறும் புள்ளி விவரங்களாய் இல்லாமல்
விறுவிறுப்பாக இருக்க வேண்டும். அதைப் படிக்கும் ஒவ்வொருவர் கண் முன்னாலும் அந்த 'பார்' கலாச்சாரம் வர வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அடுத்த முறை மும்பை வருகையில் குடிக்காதவன் கூட பாருக்குச் செல்லும் எண்ணம் தோன்ற வேண்டும். அது உங்களால்தான் முடியும்( இது வேறா?)"
'தலைப்பு சுவராஸ்யமாக உள்ளது. ஆனால் தவறான ஆளை அணுகுதல் அவ்வளவு சுவராஸ்யமாக இல்லையே. மேலும் நான் 'பார்' எல்லாம் சென்றதும் கிடையாது. மேலும் பெண்கள் மற்றும் நடன பார் என்று பெரிய அளவில் விஷயம் உள்ளது. நான் பீரையே வீட்டில் வைத்துக் குடிக்கும் பழக்கம் உடையவன். “
" 'அவன்' மும்பை வந்து இருப்பதாக சொன்னீர்கள் அல்லவா? அவனுடன் தினமும் ஒரு பார் என்ற அளவில் விஜயம் செய்து எழுதுங்கள்."
ரமணி எளிதாகச் சொல்லி விட்டார்.இதில் எத்தனைப் பிரச்சினை உள்ளது என அவர் அறிய மாட்டார்." முதலில் 'அவனை' பாருக்குக் கூட்டிக் கொண்டு போவது என்பது தற்கொலைக்குச் சமம். மேலும் ஏதாவது பெண் வடிவத்தில் ஒருவரைக் கண்டு விட்டால் போதும். முடிந்தது.அப்புறம் எனக்கு இந்தி தெரியாது எனபது வேறு. அப்புறம் செலவு என்ற ஒன்றைச் சிறிதாகக் கணக்குப் போட்டதில் எனக்கு பீர் குடிக்காமல் தலை சுற்றத் தொடங்கியது.
இரண்டு நாட்கள் கழித்து 'பதிவு தயாரா' என்றார்." ஒரு பெண்மணி ஒண்டுக் குடித்தனத்தில் எப்படி 'மாத விடாய்' நாட்களில் காலம் கழித்தார் என்று கூட எழுதி இருக்கிறார் என்றார். நான் மெதுவாக 'மந்த்ராலயாவுக்கு மாலை போட்டு இருப்பதாக'த் தப்பித்துக் கொண்டேன்.
----------------------------------------------------------
பெங்களூர் நண்பர் 'திரு'வுடன் இரவு உரையாடுவது வழக்கம். அவர் அவ்வப்போது நான் மற்றும் பலர் எழுதுவது பற்றி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஒரு நாள் " சூர்யா நான் சில தலைப்புகள் தருகிறேன். எழுத முயற்சி செய்யுங்கள்" என்றார். எனக்கோ பள்ளிப் போட்டிகள் அல்லது பத்திரிகைப் போட்டிகள் நினைவுக்கு வந்தது.மறுபடியும் பேசும்போது என்ன ஆயிற்று என்பார். நான் மறந்து விட்டேன் என்பேன்.
" சரி மடிக் கணினி இதோ உள்ளது. இப்போதே தலைப்புகளை மின் அஞ்சல் செய்கிறேன்."
மாதிரிக்கு சில.
1. 90 டிகிரீ அல்லது எவளுக்காக இந்த 90 டிகிரீ( என் கவிதை கழிசடையாக இருப்பதாக விமர்சனம் செய்யும் நண்பர்கள் அம்பை மறந்து விட்டு 'எய்தவன்' எங்கு உள்ளான் என்று பாருங்கள்.)
2.கன்னி கழியாதவன்.( இதை எழுத எனக்கு முழு தகுதி உண்டு என்றாலும் வார்த்தைகள் இது வரை வசப்பட வில்லை.)
3.குறி...வைத்த குறி.( எனக்கு திரு வைக்கும் குறியா? )
4.மலையிலே ஒரு .....( நான் சின்ன வயதில் இந்த மாதிரி தலைப்பில் ஒரு கதை கூடப் படித்தது இல்லை.)
திரு பேசுவதற்கு சுவராஸ்யமான ஆள் என்றாலும் இப்போது எல்லாம் ஒரு பயம் வந்து விடுகிறது. 'பொல்லாதவன் கருணாஸ்" பாணியில் தலைப்புச் சொல்ல ஆரம்பித்து விடுவாரோ என்று.
==========================================================
என் நீண்ட நாளைய நண்பன் மணி எனக்குப் போட்ட பின்னூட்டம் பாருங்கள். வலைப் பூவுக்கு வாழ்த்தி விட்டு "எல்லாம் படித்து முடித்த பிறகு நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு நிறையக் கெட்ட வார்த்தைகளுக்கும் செக்ஸ் வார்த்தைகளுக்கும் பொருத்தமான வார்த்தைகள் தெரிந்து கொண்டேன்.'அவலும் ( அவள் அல்ல) அங்கிளும்' என்று முன்னால் ஒரு நிகழ்வு சொல்வாயே .அதைப் பதிவு செய்யேன்"
அது கிட்டத்தட்ட ஒரு ‘அஞ்சரைக்குள்ள வண்டி' அளவுக்கு இருக்கும்.
என் குறிப்பு-இவர்களுக்கு இருப்பதெல்லாம் இலக்கிய தாகமா இல்லை என் மீது கொலை வெறியா?.

Monday, August 11, 2008

விரதம்

ஆடை களைந்து
ஆவலாய் அருகில் வந்து அணைத்து
ஒரே நேரத்தில்
உதடு சுவைத்து
அதே நேரத்தில்
பிருஷ்டம் பிசைந்து
முலை கசக்கி
மோகம் உச்சிக்கு ஏற
அவள் என்னை படுக்க வைத்து
என் மேல் ஏறிப் படர
மெத்தென அல்ல...
மொத்தென என் முகத்தில்
முலைகள் மோத
முழிப்பு வந்தது.
விழித்துப் பார்த்தேன்.
விறைத்து நின்றது குறி.
நல்ல வேளை
விந்து வெளியேறவில்லை.
நான் விரதத்தில் இருந்தேன்.

Thursday, August 7, 2008

எவளால்?

ரயில் பயணத்தில்
எதிரில் 'ஏன்ஜலாய்' அமர்ந்து இருந்தும்
ஒன்றும் பேசாத அவளாலா....

எதிர் இருக்கையில் அமர்ந்து
குனியும் போதும் நிமிரும்போதும்
என்னை அவஸ்தைப் படுத்திய
அந்த 'ஆண்டியாலா'......

கருப்பாய் இருந்தாலும்
இவ்வளவு கவர்ச்சியாய்
இருக்க முடியும் என்று
சிக்கென உடை அணிந்து
தன் தனங்களையே
என்னை வெகு நேரம் பார்க்க
வைத்த அவளாலா....

தாயும் மகளுமாய் இருந்தும்
எவளைப் பார்ப்பது
என்று என்னை அலைக்கழித்த
அந்த ஜோடியாலா......

எவளால் என் குறி
நடு இரவில் விறைத்து
நின்றது
விழித்துப் பார்க்கையில்?
இல்லை வெறும் குளிராலா?




Thursday, July 31, 2008

பிறன்மனை

"நீ சொல்லுவது எல்லாம் பிறன் மனைவிகளைப் பற்றியதாய் உள்ளதே என்பதுதான் என் தயக்கம்."என்றேன் அவனிடம்.

" மூடனே அவர்கள் எல்லாம் என்னுடைய முன்னாள் காதலிகள். நாங்கள் கிட்டத்தட்டக் கணவன் மனைவி போன்று வாழ்ந்தவர்கள். நீ குற்றம் சாட்ட வேண்டும் என்றால் இப்போதைய கணவன்மார்களைத்தான் சொல்ல வேண்டும்." இது அவன்.

" அதோடு நாங்க எல்லாம் சின்ன வயதிலியே 'கம்பராமாயணம்' படித்து வளர்ந்தவர்கள்" என்று கிட்டத் தட்ட ‘வடிவேலு’ பாணியில் கூறினான்."அதன்படி நடக்கவும் செய்கிறோம்".

ஆச்சர்யத்துடன் "கம்பர் அப்படி என்ன சொல்லி வைத்து விட்டு சென்று உள்ளார்?" என்றேன்.

" பிறன்மனை நோக்கப் பேராண்மை வேண்டும்".ஒரு கணம் அதிர்ந்து விட்டேன்.

" அடப் பாவி அது பிறன் மனை நோக்காப் பேராண்மை வேண்டும்".

" கம்பர் கால்வாங்கு விஷயங்களில் 'வீக்' என்பது உனக்குத் தெரியாது"

என் குறிப்பு-
அவனுக்குத் தமிழ் சரியாகப் படிக்கத் தெரியாது என எனக்குத் தெரியும். அதற்காக அது அவனது வாழ்க்கையில் இப்படி விளையாடும் என எண்ணவில்லை.

Monday, July 21, 2008

எலியால் வந்த கிலிக்கு எதிர்வினை கள்.

எலியால் வந்த கிலிக்கு எதிர்வினை கள்.

கோவை நண்பர் படித்து விட்டு எழதியதை அப்படியே "அவனுக்கு" பார்வர்ட்
செய்தேன். அந்த விவரம் இதோ."ஏனய்யா , காட்பரீஸ் மாதிரி இருக்கும்னு எழுதினால் எவளாவது ஒருத்தி அதெப்படி மூத்திரவாடை அடிக்கும் அது இவனுக்கு மட்டும் காட்பரீஸ் சாக்லெட் ஆக இருக்கும்னு நினைச்சு, என்னதான்னு இருக்குன்னு பார்த்திருவோம்னு வருவாள்னு நாக்கை தொங்கப் போட்டுக்கினு இருக்கீகளா ?". அவனது பதில் இதோ."தொஙகப் போட்டு இருப்பது என்னவோ நிஜம்தான்..ஆனா நீங்க சொல்ற மாதிரி நாக்கை இல்லை.."

நான் இந்த வாக்கு வாதத்தில் பங்கு கொள்ள விரும்பவில்லை.ஆனால் எனக்கு ஒரு சின்ன ஆச்சர்யம் மட்டும்தான். இந்த " வரலாற்றுப் புகழ் நிகழ்வில் " மூத்திர வாடையைப் பற்றி சிந்தித்து உள்ளாரே என்பதுதான்.அவருக்கு சந்தேகம் தீர வழி உள்ளது. பேசாமல் " பில் கிளிண்டனுக்கு" வாய்ப் புணர்ச்சி" செய்ததாக பரபரப்பாகப் பேசப் பட்ட பெண்ணிடமோ , இல்லை சமீபமாக டெல்லியில் ஒரு சக மாணவனுக்கு " வாய்ப் புணர்ச்சி" சாகசம் செய்த ("புளூ டூத்", internet உதவியால் உலகமெங்கும் அறிய முடிந்தது) மாணவியிடமோதான் கேட்க வேண்டும். இல்லையேல் ஏதேனும் சிறை வாசிகளிடமோ,
( ' நீஉன் பின் புறம் தந்தால் என் வாய் உனக்கு', என்பது அடிக்கடி அஙகு புழங்கும் வாக்கியம். அல்லது vice versa), சென்னையில் பூங்காக்களில் ( அதற்கெனவே தனி இடங்கள் உள்ளன) " வாய்ப் புணர்ச்சி" செய்பவர்களிடமோதான் கேட்க வேண்டும்.
**********************************************************************************************************************************
பங்களூரு நண்பர் ஒருவர் ‘பதிவு நன்றாக, விறுவிறுப்பாக இருந்தது.ஆனால், காட்பரீஸ்தான் கொஞ்சம் ஓவர்’ என்றார். அதை அவனிடம் கூறினேன்.அவன் " என்னோடது கொஞ்ச ஓவர் சைஸ்தான், ஆனா அவருக்கு எப்படித் தெரியும? என்று பதில் சொன்னான்.
===============================================================================
எனக்கு காரைக்குடியில் படித்த போது ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சீனிவாசன். நீண்ட நாட்களாக தொடர்பு இல்லை.ஆனால் எனது மெய்லிங் லிஸ்டில் அவரது மின் அஞ்சல் முகவரியும் இருந்ததால் என் எல்லா மெய்ல்களையும் அவர் பெறும் வாய்ப்பு உண்டு. அவருக்கு வாசிக்கும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் வெகு ஜனப் பத்திரிகை படிப்பது அவரது வழக்கம். என்னுடிய வலைப்பூவின் தொடர்பை அவரும் பார்த்துப் படித்து விட்டு எனக்கு போன் செய்தார் பல வருடங்களுக்குப் பிறகு.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு " நீயும் எழத ஆரம்பித்து விட்டாயா?" எனக் கேட்டார்.

" ஆமாம்"

" செக்ஸ் கதை எல்லாம் எழுதுகிறாய் போல உள்ளதே?"

"அடப் பாவி அப்படியா தோன்றியது? அவனிடம் சொல்கிறேன்"

"நீ 'முன்னால்' பால குமாரனைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்தாய். இப்போது என்னன்னா குறி, காட்பரீஸ்னு அசிங்கமாக எழுதுகிறாய்?"

" மன்னிக்கவும்.நான் அவனுடிய அனுபவங்களை எனது வலைப்பூவில் அனுமதிக்கிறேன்.'நான் அவன் இல்லை'. அவன் யாரைப் படிக்கிறான் என்றும் எனக்குத் தெரியாது."

" அது சரி நிலை இப்போது யாரைப் படிக்கிறாய்?"

" சாருவை"

" அது யார்?'. வலைத் தள தொடர்பைக் கொடுத்தேன்.
*****************************************************************************************************************************
ஒரு இரண்டு நாட்கள் இருக்கும். மறுபடியும் அன்பரிடமிருந்து போன் வந்தது.

" என்னப்பா இது இப்போதான் நீ எப்படிக் கெட்டுப் போனாய் என்று தெரிகிறது. ஒரு 'காப்பி' எடுத்து நம்ம ஊரில் காட்டினால் ஒரு பய பொண் கொடுக்கமாட்டான் தெரியுமோ இல்லயோ?"

" 'நான் அவன் இல்லை'.அவன் வேறு நான் வேறு.'கடவுளும் நானும்' , "உலக இசையினூடாக ஒரு பயணம் எல்லாம் கண்ணில் பட வில்லயா?"

" எப்படியோ ஊரை ஏமாத்து" உரையாடல் இப்படியாக முடிந்தது.
**********************************************************************************************************************************

இரண்டு நிமிடங்களில் மீண்டும் அலை பேசி அழைத்தது.நம்புங்கள் இரண்டு நிமிடம்தான். எண்ணைப் பார்த்தேன்.அவர்தான்.

இப்போது குற்றம் சாட்டும் தொனி போய், சிறிது தயக்கத்துடன் " உண்மையிலேயே அந்தக் "குறி சுவைத்தல்' உண்மையான விழயம்தானா இல்லை ”பெப்’புக்காக எழுதப் பட்டதா?'

" திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.' நான் அவன் இல்லை'.வேண்டும் என்றால் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்".

" சரி. கோபப் படாதே. எனக்குத் தெரியும் நீதான் அவன் என" என மறுபடியும் கோபப் படுத்தினார்.

" சரி சரி, உன் அனுபவத்தை சொல்லேன்."

"நண்பரே நான் இன்னும் பிரம்மச்சாரி. மறந்து விடாதீர்".

" அடேய் கள்ளா . சின்ன வயதிலியே உன் சிருங்கார லீலைகளை நான் நன்றாக அறிவேன்.என் வீட்டுக்கு வந்த என் சொந்தக் காரப் பெண்ணைச் சுற்றி வந்த கதை தெரியும்.அவளும் உன் மேல் பிரேமையாய் இருந்ததை அறிவேன்."

" சரி. எனக்குத் தெரிந்த வரையில் அது நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் சாதாரணப் பெண்ணோ, மனைவியோ சம்மதிப்பார்களா என்று தெரியாது. நீர்தான் திருமணம் முடிந்தவர் ஆயிற்றே. பின் என்ன தயக்கம். முயற்சி பண்ணிப் பாருமே."

" அதற்குத்தான் நான் உன்னை அழைத்தேன்".ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போய் விட்டேன். அவருக்கு வயது ஒரு அம்பதுக்கு மேலே இருக்கும்.

" என்ன உளறுகிறீர்? நான் உமக்கும் பண்ணி விடச் சொல்கிறீரா? இல்லை என்னை உம் மனைவியிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறீரா?"

" அது இல்லை.எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளாக இருக்கு. ஆனால் இது வரைக்கும் இது எல்லாம் சும்மா ஒரு இதுக்குச் சொல்றாங்கன்னு நினைத்து விட்டேன்."( எத்தனை இது? )

" சரி ஐயா, பேசாமல் உன் மனவியிடமே கேட்டு விடுமே" .

" அங்குதான் இடிக்கிறது'

" இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே ஐயா. பின் எது எது இடிக்கிறது. அதுவும் இந்த வார்த்தை அவங்க இல்லை சொல்லணும்"

" இல்லை. கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளுக்கு அப்புறமா இதை நான் கேட்டேன் என்றால்,' எப்படி ஒய் உமக்கு இப்போது தெரிந்தது? அப்படி என்றால் இப்போது உமக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்குத் தொடர்பு உள்ளதா? இல்லை ஏதேனும், அந்த மாதிரிப் படம் இன்னும் பார்க்கிறிறா? பொண்ணு வயசுக்கு வந்துட்டா மனசுல இருக்கோன்னோ. இல்லை எந்தக் கருமாந்தரம் பிடிச்சவன் சொல்லித் தரானோ அந்த கருமாந்தரம் பிடிச்சவன் கட்டையில போக?' என்று ஆரம்பித்தால் தினசரி ராத்திரிச் சாப்பாடு கூடக் 'கட்' ஆகும் வாய்ப்பு உள்ளது.( அவர் சாப்பிடும் சாப்பாட்டைத்தான் சொல்லி இருப்பார் என எண்ணுகிறேன்.)

" ஐயா அப்படி என்றால் இன்னொரு வழி உள்ளது. நீர் ஒரு ஐட்டமிடம்தான் போக வேண்டும் இந்த வயதில்".

" ஈஸ்வரா".என்றார்.

" ஆளை விடும்" என்று அலை பேசியை துண்டித்தேன்.

என் குறிப்பு-சாரு சில சமயம் தமிழ் வாசகர்களை, வாசிப்புத் தன்மையை, போலி மதிப்பீடுகளை பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் " கொஞ்சம் ஓவரா இவர் பண்ணுகிறாரோ" என எண்ணுவேன்.இல்லை சாருவின் மதிப்பீடுகள் 500% உண்மை என்று அறிந்து கொண்டேன்.

Monday, July 14, 2008

கதை சொல்லி-கிராமத்தில் கேட்ட கதை


கதை சொல்லி-கிராமத்தில் கேட்ட கதை

முன் குறிப்பு
1) இந்த முன் குறிப்பும்,பின் குறிப்பும் மட்டுமே என்னுடைய பங்களிப்பு. மற்ற எல்லாம் 'கதை சொல்லி' சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு தவளை இருந்ததாம். அதுக்கு அஞ்சாறு குட்டித் தவளைங்களாம்.அந்த ஊர்ல ஒரு அழகான குளம் இருந்துதாம். அதுலதான் பெரும்பாலும் இந்தத் தவளைக் குடும்பம் வாழ்க்கை நடத்தி வந்துதாம்.அந்தக் குளத்திலே தண்ணி இனிச்சுக் கொட்டுமாம்.அந்த ஊர்ல குளிக்க, துவைக்க,வீட்டுக்கு தண்ணி 'மோள' எல்லாமே அந்தக் குளத்துலதான்.நல்ல மனசுக்காரங்க மட்டும்” வவ்வாத் தோப்பில” கொல்லைக்கு இருந்துட்டு,பக்கத்து “ செம்பேத்து மடையில ” குண்டிகளுவுவானுங்க.சில கூறு கெட்ட கூமுட்டைங்க அதையும் இந்தக் குளத்திலே பண்ணுவானுங்க.

ஊருல முக்கா வாசிப் பேரு அந்தக் குளத்துல தான் மேல சொன்ன காரியங்களப் பண்ண வருவாங்க.அந்தக் குளத்துப் பக்கத்தில ஒரு ஒசரமான மருத மரம் இருந்தது. அந்தக் குளத்து ஒரு கரையில சிவன் கோயிலும், மறு கரையில பெருமாள் கோயிலும் இருந்தது. நடுவில “ சுப்ப மொட்டை” பாலம் பாதி இடிஞ்சு இருந்தது. அனேகமா நாலு இல்ல அஞ்சுவீட்டுக்குப் பின்னால “ படித்துறை “ உண்டு.விளங்காத ” மக்கா ” மாருங்க பாதி நேரம் குளத்துலதான் கிடப்பாங்க. குதிக்க வசதியா சறுக்கு ஒவ்வொரு படித்தொறையிலும் இருக்கும்.அந்த மருத மரம் ஏறிக் குதிக்கப் ”பார்ட்டிகள்” உண்டு.பொதுவா சூரியன் உச்சிக்கு வருதக்கு முன்னாடி ஒரு பதினோறு மணிவாக்கில கொமரிப் பொண்ணுங்களும், கல்யாணம் கட்டிக் கொஞ்ச நாள் ஆன பொம்பளைங்களும் வருவாங்க. அப்பக் களை கட்டும் பாருங்க. இள வட்டப் பசங்க அந்த நீச்சல், அந்தப் பாய்ச்சல் அப்படினு.அந்தத் தவளைங்க அவனுக இருக்க பக்கமே பயத்துல தலை வைக்காது.

சிவன் கோவில் கரையில் இருந்து பெருமா கோவில் கரைக்கு நீச்சப் போட்டி நடக்கும்.கெதி உள்ளவன் ஒரே ' தம்' கட்டி பெருமா கோவில் கரைக்குப் போயிருவான்.கொஞ்சம் திவங்கினவன் “ சுப்ப மொட்டை பாலத்துல ” ஒக்காந்து அப்புறமாப் போவான்.சீத்துவம் செத்தவன் அந்தப் பாலத்தோட திரும்பிருவான்.ஆனா எவன் ஒரே மூச்சுல பெருமா கோவிலுக்குப் போறானோ அவனுக்குத்தான் பொட்டப்புள்ளைங்க ஓரப் பார்வை கிடைக்கும். நடுவுல ஒக்காந்து போன பயபுள்ளைகளுக்கு ரெண்டாம் எடந்தான். பாதியில திரும்பி வந்த பய புள்ளைகளுக்கு 'டெப்பாசிட்டு' போன கதைதான்.மருத மரத்துல ஏறிக் குதிக்கதுல இன்னொரு சமாச்சாரமும் இருக்கு.தடுப்புக்கு அங்கன பாவாடைய மாரு வரைக் கட்டிக் குளிக்க பொம்பளைகளைப் பாக்கலாம்.அவுக வாழத் தண்டு தொடையப் பாக்கலாம். அப்புறமா சாவகாசமா “ மண்டபத்தில் ஒக்காந்து எவளுக்கு எது எது எங்கன எங்கன எப்படி எப்படி இருந்துது" அப்படினு நீட்டி நீட்டிப் பேசலாம். அப்புறமா எவ எவ பாயக் கொண்டாந்து அலசினாங்கிரதை வெச்சு எவ வீட்டுல முந்தின நாள் ‘ கப்ளிங் கச்சேரி’ நடந்துதுனு கண்டு பிடிக்கலாம்.

( ”சரிவே என்னா கத சொல்லுதேரு எங்கன ஆரம்பிச்சீரு? தவளையை எங்கன?”

பயபுள்ள ஒளுங்கா கவனிக்கியளானு பாத்தேன்)

ஒரு நாளைக்கு அந்த சின்னத் தவளைங்க எல்லாம் அம்மா தவளைக்கு “ கடுக்கா” கொடுத்திட்டு குளத்துல தள்ளிப் போய் விளையாடப் போயிருச்சு.வழியில கேட்கப் பட்ட “ தூரமா போதிய?” கேள்விக்கு எல்லாம் “ நாங்க பொம்பளைப் படித்தொறைக்குப் போறோம்”னு சந்தோசமா பதில் சொல்லிச்சு. அப்படியே பொம்பளை குளிக்க படித்தொறை பக்கமாப் போய் விளையாடிது.ரொம்ப நேரம் கழிச்சு உள்ளதிலே பெரிய அண்ணன் தவளை சுத்தி முத்தும் பாக்கையில மூணு தவளைக் குஞ்சுகளைக் காணலை . பரிதவிச்சுப் போச்சு. வீட்டுக்குப் போனா ' ஆத்தா தவளை விளக்குமாத்தை எடுத்து விளாசிப் புடுவாளே'னு பயந்து கடைக்குட்டியுடன் வீட்டுக்கு வந்துச்சு. வாசலுல “ காளி” கணக்கா நின்னுக்கிட்டு” எங்கன போய்த் தொலஞ்சிய..கூறு கெட்ட மூதியளா” னு ரெண்டு போடு போட்டா..அப்பத்தான் கவனிச்சுது மூணு ' கோட்ட்டாங்'களக் காணலின்னு.

“ அந்தக் கூறு கெட்ட கோட்டாங்களை எங்கன ?”

பயத்துல அந்த ரெண்டும் “ ஆத்தா எங்க கூட விளையாடிக்கிட்டி இருந்துச்சு..ஆனா திடீர்னு கண்ணுக்கு தப்பிச்சிருச்சு” சொல்லவும், தாய்த் தவளை ஆரம்பிச்ச ”ஏச்சுமழை ” ஓயவேல்ல.தாய்த் தவளை குட்டிங்க சொன்ன எடம், சொல்லாத எடம் எல்லாம் தேடிப் பாத்து( நீந்திப் பாத்தோ?) சாயங்காலமா வெறுமனே திரும்பி வெசனத்தோட வந்துது.
===============================================
மறு நாளைக்கா சூரியன் உச்சி தாண்டினோன , ‘சவக்களையோட’ தொலஞ்சு போன அந்தத் தவக்களைங்க வந்துது. அதுகளக் கண்டோனதான் தாய்த் தவளைக்கும், மத்தக் குட்டித் தவளைகளுக்கும் உயிரே வந்துது.

தாய்த் தவளை "ராப்போதுவீட்டுக்கு வராமெ எங்கனெ போய் மேஞ்சுட்டு வாரிய?"

மூணு தவளையில மூத்தது “அம்மா விளையாடிகிட்டு இருக்கயில திடீருன்னு பாம்பு வாற மாதிரி சத்தம் கேட்டுது.அப்படியே பயந்து ஓடினோம். ஒரு எடத்துல பாத்தா அப்படி ஒரு பெரிய ரெண்டு தூணப் பாத்தோம் எதுக்க எதுக்கெ. அத்தாம் பெரிய , அத்தாந் தண்டி பாத்ததே இல்லை.நான் சொன்னேன் திரும்பிப் போயிரல்லாம்னு.இவந்தான் தூணுக்குப் பின்னாலெ கொஞ்சம் தள்ளிப் போய்ப் ஒளியாலாம்னான். சரி பயத்தோட போனோம். தூணுக்கு கட்டக்கடைசில ஒரே இருட்டு. அப்புறமா ஒரே புதர் கணக்கா மண்டிக் கிடந்துது. சரின்னு பாத்தா பாம்புசத்தம் பக்கத்துல வார மாதிரி இருந்துது. பயத்துல புதர் பின்னாடி ஒரு 'கொகை' இருந்தது. அதுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டோம். ஆனா ஆழத்தில போய் மாட்டிக்கிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா நாங்க இருந்த கொகை அதிர ஆரம்பிச்சுது.அப்புறமா அந்தக் கொகையே நகந்து போக ஆரம்பிச்சுது. பயத்துல அளுகையே வந்துருச்சு. எப்படித் தப்பிக்கணுமனு தெரியலை. பயத்துலயும், பசியிலயும் தூங்கிப் போயிட்டோம். திடீருனு பாத்தா கொகையத் திறக்கிற மாதிரி ஒரு சத்தம். சரி தப்பிச்சு வெளிய போயிருவ்வோம்னு பாத்தா....கொகை வாசலை அடைச்சிக்கிட்டு ஒரு பெரிய பாம்பு ,' அன கோண்டா' மாதிரி,எங்களை முழுங்க வாயைத் திறந்த்துக்கிட்டு,யம்மா பயத்துல மயக்கமே வந்துருச்சு. நாங்க தப்பிக்க இன்னும் கொஞ்சம் உள்ள தள்ளி போயிட்டோம். அதுவும் எப்படியாவது உள்ள வந்து எங்களைப் பிடிக்கணும்னு பாத்துது. ஆனா அது முழு உடம்பும் உள்ள வர முடியல. அது பின்னால பின்னால போய் மறு படியும் முன்னால வந்து எங்களைப் பிடிக்கப் பாத்துது. கடைசி வர நாங்க எட்டியே நின்னுக்கிட்டோம். கடைசில கோவத்துல விஷத்தக் கக்கிக் கொல்லப் பாத்துது. ”

அம்மாத் தவளை ஆச்சர்யத்துடனும், பயத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தது.

“ சரி .. கொஞ்ச நேரம்”அரவம்” இல்லாம இருந்துச்சு. சரி ஓடியாந்துரலாம்னு பாத்தா மறுபடியும் இன்னோரு பாம்பு. முதப் பாம்பு போய் அனுப்பிச்சிருக்குனு நினைக்கேன். இது அதை விடக் கொஞ்சம் தண்டி சாஸ்தி.அதே மாதிரி இதுவும் உள்ள வரப் பாத்து எங்கள எட்டி எட்டிப் பிடிக்க வந்து முடியா ம கடைசியா விஷத்தைக் கக்கிட்டுப் போய்ருச்சு.இப்படி அதுங்க சொந்தம் அஞ்சு பேரு வந்து எங்களைப் பிடிக்கப் பாத்துக் கொல்லப் பாத்தாங்க. கடைசி வரை முடியல”

“ அப்புறம் எப்படித்தான் தப்பிச்சு வந்தீங்க?”

“ ரொம்ப நேரம் கழிச்சு மறு படியும்கொகை நகருத மாதிரியும் , எங்களை யாரோ தூக்கிக்கிட்டுப் போற மாதிரியும் இருந்துச்சு.அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம குளம் வந்த மாதிரி தோணிச்சு.தண்ணிச் சத்தம் கேட்டுச்சு. என்ன வந்தாலும் பரவாய் இல்லை.. இப்பம் எப்படியாவது தப்பிச்சிரணும்னு கொகை வாசலைப் பாத்தா தொறந்து இருந்தது. எந்த “அரவமும்” இல்ல. தொப்புனு கொகை வாசல்ல இருந்து குதிச்சோம். பாத்தா நம்ம குளம். ஓடி நம்ம வீட்டுக்கு வந்துட்டோம்”

தாய்த் தவளை ” எந்தத் தவளை பிடிக்கறதோ உங்களைப் பிடிச்சுக்கிட்டுப் போய்ருக்கு. யாரு செஞ்ச புண்ணியமோ பத்திரமாத் திரும்பி வந்துட்டீங் க...இனிமே அங்க எல்லாம் போகாதே”னு அதுங்களைக் கட்டிக்கிடுத்து.

பின் குறிப்பு-

1) கதை புரியாதவர்களுக்கான குறிப்பு- முதல் நாளும், இரண்டாம் நாளும் அந்த நேரத்தில் வந்து குளித்தவள் அந்த ஊரின் மிகப் பிசியான விபச்சாரம் செய்யும் “ ஷகீலா “ போன்ற தோற்றம் உடைய ஒரு பெண்.


2) அவள் இரண்டாம் நாள் குளித்து முடிந்து செல்கையில் “நேத்திக்கு குளிக்க வந்ததிலே இருந்து அடி வயத்துக்கு கீள குறு குறுனு இருந்தது இன்னிக்கு குளிச்ச அப்புறமா சரியாயிருச்சு” என்று மு ணுமுணுத்துக் கொண்டே சென்றாள்.

3) இந்தக் குறிப்புகளுடன் மறுபடியும் படித்துப் பார்க்கவும்.

4) இன்னும் புரியாதவர்கள் என்னை மன்னிக்கவும் இதை எழுதியதற்காக.

Monday, July 7, 2008

எலியால் வந்த கிலி

எலியால் வந்த கிலி

அவன் அலுவலகம் முடிந்து வந்து முகம் கழுவ குளியலறைக்குச் சென் றான்.முகம் முழுவதும் சோப்பு அப்பிய நிலையில் திடீரென ஒரு சத்தம் கேட்டு அவசர அவசரமாக தண்ணீர் விட்டு முகம் அலசினான்.முழித்த அவன் முன்னால் அந்த அதிர்ச்சி காத்து இருந்தது. ஒரு பெரிய...இல்லை மிகப் பெரிய எலி குளியலறையில் இருந்து தண்ணீர் செல்லும் பொருட்டு வைத்து இருக்கும் குழாயின் மேற்பரப்பில் இருக்கும் மூடியை உந்தித் தள்ளி அந்தக் குழாயின் அத்தனை அழுக்கோடும் ஒரு முறை உடலைச் சிலிர்த்துக் கொண்டது.அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் பயத்தில் உறைந்து போய் ஒரு முக்கு ஓரமாக ஒதுங்கி நின்றான். அதைக் கடந்துதான் ஹாலுக்குப் போக வேண்டும். அது வந்த காட்சி க்ராபிக்ஸ் இல்லாமலேயே ஆங்கிலப் படம் பார்த்த மாதிரி இருந்தது.

அதைப் பெரிய எலி என்பதை விடப் ”பெருச்சாளி” என்று அழைக்கலாம். அந்தப் ”பெருச்சாளி” ஒரு நிமிட ஆசுவாசத்திற்குப் பிறகு மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தது.அவனுக்குத் தலை மேலே அவனை அவன் முன்னோர்கள் அழைப்பது போல் ஒரு உணர்வு. அந்த ஜந்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தது. அவ்வளவுதான்..அலறினான் பாருங்கள்...அந்த அலறலில் அந்த ஜந்துவே பயந்து போய் மறு படியும் வந்த வழியே சென்றது.கண்டம் கடக்க வேண்டி இருக்கும் என ஜோஸ்யன் சொன்னது ஆசியாக் கண்டம் கழிந்து அமெரிக்கா போவோம் என எண்ணியது எவ்வளவு பிசகு என்று புரிந்தது. ஒரு வாளியில் நீர் நிரப்பி அந்த hole மீது வைத்து ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.
============================================

இதற்கிடையில் அவனுக்குச் சுண்டெலி என்றாலே பயம்.பயம் என்றால் சாதரணமான பயம் கிடையாது.”தெனாலி” கமல் மாதிரி “ எலி என்றா ல் பயம்..எலி வால் என்றால் இன்னும் பயம்.. சுண்டெலி என்றால் இன்னும் பயம்...” என்ற ரீதியில் பேசுவான். மும்பை வந்து மூன்று வருடம் கழித்து எலிப் பயம் வரும் எனக் கனவிலும் எண்ணவில்லை.

ஆனாலும் நிஜத்தில் வந்தது. திடீரென சின்னச் சின்ன எலிகள் அவன் வீட்டில் ஓட ஆரம்பித்தன. பயத்தின் காரணமாக அவன் அந்த எலிகளுக்கு எந்தத் தொ ல்லையும் செய்வது இல்லை. இதன் காரணமாகவோ இல்லை அந்த எலிகள் எவரிடமோ “ பதினாறும் பெற்று வாழ்க “ என வாழ்த்துப் பெற்றதாலோ பல்கிப் பெருகின. அவனது ஆடைகள் அவைகளுக்கு” கக்கா “ போகவும், அவனுடைய பீ ரோ அந்தப்புரமாகவும் மாறின. அவன் இப்போது எல்லாம் பீரோவைத் தட்டாமல் திறப்பதே இல்லை. ஏன் எனில் எந்த நேரம் என்ன கலவிக் காட்சி கண்ணில் பட்டுத் தொலையுமோ என்று தெரியாது.மேலும் அவன் சாஸ்திர , ஜோஸ்ய விஷயங்களை நம்பும் வழக்கம் உடையவன் ஆதலால், ஒரு வேளை நாம் அதன் கலவிக்கு இடைஞ்சல் செய்து , அவை அடுத்த பிறவியில் அவனாகப் பிறந்து அவன் அவைகளாகப் பிறந்து அவனின் கலவிப் பொழுதில் இடைஞ்சல் செய்தால் என்ன செய்வது என்ற ஒரு முன் எச்சரிக்கையும் கூட. அவனுக்கு எலியை அடிப்பதில் பயம் இருந்ததால் அவைகளுடன் எச்சரிக்கை யாக வாழத்தொடங்கி விட்டான்.

இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன் படுத்தி அவனது பீரோவை அந்தப்புரம் ஆ க்கி ஏகப்பட்ட இனப்பெருக்கம் செய்து விட்டன. எங்கு நோக்கினும்" எலி ராஜ்ஜியம்தான்”. ஒரே உல்லலாதான்.

அவன் ஒரு “ வான் ஹுசைன்” கால் சட்டை வாங்கி அணியாமல் ( விலை ரூபாய் 2900) , அதை என்றாவது ஒரு பிகரைப் பிக் அப் செய்யும் அன்று அணியும் எண்ணத்தில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வைத்து இருந்தான்.அதில் விளையாடி விட்டது எலிகள். அதைப் பாழ் பண்ணியதில் கூட கோவம் அதிகம் இல்லை.ஒரு வேளை அதன் மூலம் இனி எனக்கு பிகர் யோகமே இல்லையோ என ஒரு கேலி தென்பட்டதால் "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்ற நிலைக்கு வந்தான்.

அது சரி கூடு வாங்கி வைக்கலாம் எனப் பார்த்தால் பாதி எலிகள் ‘ குஞ்சு குளு வான்களாய் ” இருந்தன.வெளியே வந்து விடும். ஏதாவது மருந்து வாங்கி வைக்கலாம் என்று பார்த்தால் எங்கேனும் செத்துத் தொலைத்தால் வீடே நாறும் அபாயம் உள்ளது.( ஏற்கெனவே “ கக்கா ”வாசம் தாங்க முடியவில்லை.) எலி அடிக்க "அவுட் சோர்ஸ்" பண்ணுவதாய் முடிவு செய்து ஒரு ஆளை வரவழைத்தேன்."அவுட் சோர்ஸ்" காரன்( சுருக்கமாக osp) போட்ட நிபந்தனைகளுள் சில- “ சார் நீ என்னா பண்றே….மார்க்கெட் போய் நல்ல பெரிசு ஒண்ணு சிறுசு ஒண்ணுனு கொம்பு வாங்கி வை…..அப்புறமா உன் பக்கத்து வீட்டு ஐயரைத் துணைக்கு கூப்பிட்டு வை......சாயங்காலமா ஆபிஸூக்கு ஒன் அவர் பெர்மிஷன் போட்டுரு..”. நிறுத்தியவன் “ எனக்கு எலியைப் பிடிச்சோன களைப்பா இருக்கும், ரெண்டு பீரைப் பிடிச்ச்சுக்குனு வந்துரு”.

விதியே என்று எல்லாம் செய்து தொலைத்தேன்.பக்கத்து வீட்டு ஐயர் மன திற்குள்’ இவன் வீட்டு எலிக்கு நாம ஏன் பெர்மிஷன் போடணும்னு ” நினைத்து இருக்க வாய்ப்பு உண்டு.அந்த சுப வேளையும் வந்தது.மாலை ஆறு மணி அளவில் வந்தான்.இருப்பதே ஒரு ஹாலும் ஒரு சமையல் அறையும் ஒரு குளியலறையும்தான். ஏதோ கிரிக்கெட் அணித் தலைவர் மைதானத்தைப் பார்ப்பது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான்.பிறகு “ நான் ஏன் இந்த நேரத்துக்கு வரச் சொன்னேன் தெரியுமா ?” என்று கேட்டு எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.” எலிங்க எல்லாம் இன்னேரம்தான் டயர்டா இருக்கும்” என்று சொல்லி எங்களைத் திகைப்பில் ஆழ்த்தினான்.(மேட்சுக்கான strategy போ
லத் தோன்றியது). பிறகு என்னை ஒரு பீரோவுக்கு ஒரு புறம் ஒரு கொம்புடனும், மாமாவை சோபாக்கு அருகிலும் நிற்க வைத்தான்.( fielding set up?) மாமா கையில் விளக்குமாறு. பீரோவைத் திறந்து உடன் மூன்று குட்டி எலிகள் osp மேல் தாவிக் கீழே குதித்து ஒன்று சோபா அடியிலும், ஒன்று டிவி ஸ்டாண்ட் அடியிலும்,ஒன்று சமையல் அறைக்கும் ஓடியது.Ospயோ காற்றில் கொம்பை இந்தியன் மட்டை வீச்சாளர்கள் போல் வீசிக் கொண்டு இருந்தான். வழ்க்கம் போல் ஒரு அடி கூட எலியின் மேல் விழவில்லை. இவ்வளவு இழுத்துச் சொல்லும் அளவுக்கு ஹால் ஒன்றும் பெரிசு இல்லை. ஒரு 100-125 சதுர அடி மட்டுமே இருக்கும். இந்த அளவு அறையில் மூன்று பேரும் எ லிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடியதில் மாமாவுக்கு வேட்டி அவிழவும் ‘ என் ஆட்டம் அவ்வளவுதான்” என hurt retired ஆனார். கடைசியில் அவர்களது அணி க்கும், எலிகள் அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் முடிந்தது.Osp இறுதியாகச் சொன்னான்.” நாந்தா அப்பவே சொன்னேன் இல்ல...அதுங்க களை ச்சுத் தூங்கப் போயிருச்சு போல இருக்கு.. நாம தாக சாந்தி செய்யலாம்”.பீர் குடித்து ஆம்லெட்டும், சிக்கன் ரைசும் சாப்பிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிப் போனான்.இதற்கிடையில் Osp செய்த ஒரே நல்ல காரியம் பொந்துகளைக் கண்டு பிடித்து ஒயிட் சிமெண்ட் வைத்து அடைத்தான் “ இன்னா ப்பா நீ தமாஸா சொல்லுவியே ஒரு சின்னப் பொந்துல இருக்கேன்னு..மெய்யா லுமே அப்படித்தான்” என்ற வருணனையோடு.

காலையில் Osp போகும்போது ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுப் போனான்.” நீ இன்னாப்பா போதையில தூங்கிட்ட...எலிங்க எல்லாம் உன் தொப்பை மேல ஏ றி விளையாடுதுங்க”.

எலியைப் பற்றி அளவுக்கு அதிகமாகப் பேசி விட்டோம். முக்கியமான “ கிலி” விழயத்திற்குப் போக வேண்டி இருப்பதால், அவன் அவனுடைய சொந்த மா வட்டமான “ நெல்லை” யில் இருந்து professtional killers அல்லது அடியாட்க ள் வரவழைத்து ஓரளவு எலிகளை ஒழித்துக்கட்டிய கதையை விவரிக்க விரும்ப வில்லை…
==========================================================================
அதன் முன்னால் அவனுடைய மூன்று விஷயங்களை அறிந்து கொள்வது உசிதம்.

1) ஒரு முறை அவனுடைய குறியைச் சுவைத்து விட்டு அவன் பெண் தோழி சொன்னது” காட்பரீஸ் மாதிரியே நல்லா இருக்கு”. குறியின் அமைப்பை, வண்
ணத்தை,சுவையை இதில் எதை வைத்து அவள் எண்ணத்தைச் சொன்னாள் என அவனுக்குத் தெரியாது.

2)மணிரத்தினத்தின் “ இருவர்" படம் அவனால் மறக்க முடியாத படம். படத்தின் தரத்திற்காக இல்லை.படம் பார்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்காக.அவனும்(அவன் காதலித்த போது) அவன் காதலியும்,அடிக்கடி திரைப்படம் செல்வது வழக்கம். முக்கியக் காரணம்-இருளில் நீண்ட நேரம் கழிக்க முடியும் என்பதால். ‘இருவர்' படத்துக்கு முதல் நாளே ‘உட்லேண்ட்ஸ்” ( சென்னை) அரங்கில் கூட்டம் இல்லை. வழக்கமாக அவர்கள் "கார்னர் இருக்கை கலாச்சாரவாதிகள்".( கார்னர் இருக்கை எதற்கு என்று கேட்பவர்கள் தயவு செய்து படிப்பதை நிறுத்தி விட்டு cartoon சேனல் பார்க்கப் போங்கள்.) கார்னர் இருக்க்கை வாங்க அவன் வழக்கமாக கடைப்பிடிக்கும் வழி.அவளை டிக்கட் வாங்க அனுப்பி பக்கத்தில் நின்று கொண்டு டிச்கெட் கொடுப்பவரை கெஞ்சும் விதத்தில்பார்க்க வேண்டும். அதிகமான இடத்தில் இது workout ஆகி உள்ளது.அன்று அதற்கு
தேவையே இல்லாமல் போனது.கூட்டமே இல்லாததால் டிக்கெட்வழங்குபவர் B12,B13 இருக்கைக்கான டிக்கெட்களை வழங்கினார்.அந்த இருக்கைகள் கார்னர் இருக்கைகள் இல்லை என்ற போதிலும் அதை விட வசதியானது.( அவர்களுக்கு எந்தத் திரை அரங்கில் எந்த கார்னர் இருக்கைகள் என்ன என்ன வசதிகளுடன் இருக்கும் என அத்துப்படி). B12,B13 இருக்கைகள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து உள்ளே மேல் நோக்கி வரும் வாயிலுக்கு வலதுபுறமாக ஒரு தொட்டி அல்லது குழி போன்ற அமைப்பில் இரண்டே இரண்டு இருக்கை மட்டுமே இருக்கும். மேல் இருக்கையில் இருந்து பார்ப்பவர்கள் கூடத் தலைவரை மட்டுமே பார்க்கமுடியும்.

வழக்கம் போல் "அரங்கக் களி ஆட்டம்" துவங்கியது.முத்தத்தில் துவங்கி, முலை தடவலில் முன்னேறி இறுதியில் அவன் ஜிப்பவிழ்ப்பில் வந்து நின்றது.மேலும் இந்த சம்பவத்தை நேரடி வருணனை செய்யும் உத்தேசம் இல்லை. கிலி விஷயத்திற்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அவள் அவனிடம்சொன்னது-” முதல்ல சுண்டெலி மாதிரிதான் இருக்கு.கைய்ய வைச்ச உடன் பெருச்சாளி மாதிரி ஆய்டுது”.


உபரித் தகவல்-தொடர்ந்து மூன்று நாட்கள்,”சுண்டெலி-பெருச்சாளி” விளை யாட்டுக்காக அதே படத்துக்கு அதே இருக்கை கேட்கவும் டிக்கெட் கவுண்டரில் ஒரு மாதிரியாய்ப் பார்த்ததால் நாலாம் நாள் அரங்கு மாற வேண்டியதாய் ஆகி விட்டது. ஒரு வேளை “மணி"க்குத் தெரிந்து இருந்தால் அவர்களைக் கூப்பிட்டு பாராட்டி இருக்கக் கூடும்.இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்த ஒரே ஜோடி என்பதால்.


3)அவனுக்கு பெரும்பாலும் குறைந்த ஆடையுடன் இருப்பது பிடிக்கும். குறிப்பாகப் படுக்கையில் ( தூங்குகையில்) நிர்வாணமாக அல்லது ஒரு சிறிய துணியுடன் தூங்குவது மிகவும் பிடிக்கும்.

அந்தப் பெருச்சாளி வாளியின் அடிப்பகுதியை முட்டிக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தம் அவனின் பயத்தைக் கூட்டியதால் போத்தல் பியரைக் குடித்துத் தூங்கப் போனான்.அவனிடம் ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது தீவிரமான உணர்ச்சியுடன்/ எண்ணத்துடன் படுக்கப்போனால் அந்த உணர்ச்சி அல்லது எண்ணம் சம்பந்தமாக அவன் உள் மனம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும்.எவ்வளவு போதையில் இருந்தாலும் கூட.

உள் மனம் இரவு மூன்று மணிவாக்கில் முழித்துக் கொண்டது.ஏற்கனெவே அவனின் குறி "காட்பரீஸாக" எண்ணப் பட்டது. சுண்டெலி பெருச்சாளி ஒப்புமை வேறு.அன்று இரவு பொட்டுத் துணி இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தான். ஒருவேளை அந்தப் பெருச்சாளி வெளியே வரும் வேளை யில் அவனது குறி "காட்பரீஸாக"த் தோன்றி அதைச் சுவைக்கும் எண்ணம் வந்தால்? இல்லை இன்னொரு பெருச்சாளியாகத் தோன்றி கலவிக்கு அச்சாரம் போட்டால்? இல்லை சுண்டெலி என எண்ணி விளையாட முற்பட்டால்?

படக்கென முழித்துப் பார்த்தான்."கும்பிடப் போன தெய்வம்" குறுக்கே நின்ற மாதிரி குறி நின்று கொண்டு இருந்தது சேதாரம் எதுவும் இல்லாமல்.

பின் குறிப்பு- "அவன் தினமும் அதிகாலையில் அவனது மொபைலில் பதிந்து வைத்து உள்ள ஒரு தெய்வத்தின் தின அபிஷேக, கற்பூர ஆரத்தியிலோ இல்லை அவன் விருப்பமான கடவுளின் படத்திலோ அல்லது குறைந்த பட்சம் உள்ளங் கைகளிலோ கண் முழிப்பது வழக்கம்" என்பது எனக்குத் தெரியும்.
.

Thursday, June 19, 2008

லூ

எனக்கு ஏ சி பார் சென்று மது அருந்துவது ரொம்பப்பிடிக்கும்.சாதரணமான மது விற்பனைக் கடைகளிலோ அதன் பார்களிலோ நினைத்துப் பார்க்க முடியாது.ஏன் எனில் டீக்கடையில் உட்கார்ந்து மது அருந்தும் எண்ணம் எனக்கு.அதற்காக நான் ஒன்றும் அந்த அள்வு பணக்காரன் இல்லை.அதன் மந்தஹாச சுகத்திற்கும், நீண்ட நேரம் உட்கார்ந்து அருந்தும் சுகமும் இழக்க முடிடயாத ஒன்று வாழ்க்கையில்.

இன்னொரு காரணமும் உண்டு. நான் கிராமப் புரத்தின் நடுத்தர குடும்பதிலிருந்து வந்தவன் என்பதால் ஏ சி பார் மற்றும் டிஸ்கோ போன்ற விஷயங்கள் எட்டாக்கனவு மாதிரி இருந்தது. ஒரு நாளாவது ஒரு பருவ மங்கையுடன் மது அருந்தி விட வேண்டும் என்பது ஜென்மம் சாபல்யம் அ டை ய ஒரு எ ளிய வழியாகக் கருதினேன்.அதற்காகவும் பெண்கள் மது அருந்தி ஆட்டம் போடும் பார்களாய் வலம் வந்தேன்.( இப்போது எல்லாம் இது ஈஸி ஆகிவிட்டது.)

நகரின் அந்த உயர் மட்ட பெண்களுக்கான பாரில் ஒரு பெண்ணை ப் பார்த்தேன்.இதே ஒரு நாவல் ஆக இருந்தால் அவளைப் பெண் என்று சொல்வதே பாவம்..தேவதை ...மது அருந்தும் ஏஞ்சல்..அப்படி இப்படி என்று வருணிக்கலாம். நாம் மெயின் விஷயத்திற்கு வருவோம்.

வழக்கமாக தினசரி ஒவ்வொருவருடன் வருவாள்.ஒரு முறை வந்தவரின் வயது சுமார் 60 இருக்கும்.ஆனால் நிச்சயமாக விலை மகளாகத்தெரியவில்லை.

அவள் மிகவும் ஹைஃபி என்பது மட்டும் புரிந்தது.தினசரி என் ”நவ துவாரங்களிலும் புகை வரத் துவங்கியது’.( மேற் கோள் இட்ட வார்த்தை என் அன்பு எழுத்தாளரிடம் கடன் வாங்கியது). நாட்கள் செல்லச்செல்ல அவளுடன் ஒரு நாளாவது குடித்து( குடித்து மட்டும்) விட வேண்டும் என்ற ஆசை ப்ரபஞ்சத்தை விடப் பெரியதாய் வளார்ந்து கொண்டே போனது.வேண்டாத தெய்வம் இல்லை.

ஒரு நாள் கடவுள் என் கஷ்டத்தை ப் புரிந்து கொண்டாரோ என்னவோ அந்த சம்பவம் நிகழ்ந்தது. நான் பாரின் உள்ளே இருந்ததால் வெளியே வானத்தில் திடீர் என நட்சத்திரங்களும், தூரத்தில் தென்றல் காற்றும், தோன்றியதோ அல்லது வீசியதோ எனக்குத் தெரியாது.ஏன் எனில் நேரம் அப்போது காலை 11.30.

அந்த தேவதை உள்ளே நுழை ந்தாள். கூடவே ஒருவன்.வழக்கத்துக்கு மாறாக என் அருகில் இருந்த டேபிளிள் அமர்ந்தனர்.ஆர்டர் செய்தனர்.கூட இருந்தவனின் மொபைலில் பெல் அடித்தது, ஒரு வேளை என் தினத் தூக்கத்தைக் கெடுக்கும் என் மேன்ஷன் ரூம் மேட் “பழத்தின்” தினசரிகாலை பூஜையின் போது அடிக்கும் மணி ஓசையால்வந்த புண்ணியமாகக் கூட இருக்கலாம்.( இவ்வளவு நீள வாக்கியம் தேவையா?)

இதற்குள் அவர்ளுக்குள் குசுகுசு எனப் பேச்சு.சிறிய வாக்குவாதம் எனவும் கூறலாம்.அவன் விடை பெற்றுப்போனான்.தனிமையில் விடப் பட்டாள். என் மனத்தில் நாமாகப் போய் அறிமுகப் படித்திக் கொள்ளலாமா என நினைப்பதற்குள் மொபைலை எடுத்து நம்பர்களைச் சுழற்றத் தொடங்கினாள்.’ஷிட்” என்றும்” பாஸ்டர்ட்” என்று பலவாறாகத் திட்டியபடியே கோபமாக போனை வைத்தாள்.

நிமிர்ந்த்வளின் பார்வையில் நான்பட்டேன். நான் வேகமாக வேறு பக்கமாய் திரும்பிக் கொண்டேன். ஆனால் அந்த நேரம்தான் என் ஜாதகத்தில் “ விபரீத ராஜ யோகம்” தொடங்கும் எனக் காலையில் தொலைக் காட்சி சேனல்களின் ஆஸ்தான ஜோதிடரோ இல்லை இந்த வாரம் வார , மாத பத்திரிகை களின் ஜோதிடமோ இல்லை சும்மா ஜோதிடம் பார்க்கிறேன் என்று வந்து கழுத்து அறுக்கும் எட்டாம் நம்பர் ரூம் கிழமோ சொல்லவிலை. .

“ எக்ஸ்கியூஸ் மீ” என்ற குரலுக்கு தலை நிமிர்ந்து பார்த்தேன்.அவள்தான்...அவளேதான்....அதுவும் என்னைப் பார்த்து....ராஜ யோகம்தொடங்கி விட்டதோ...அடித்த சரக்கு அத்தனயும் கால் வழியாக பூமிக்குள் வழிவதாய் உணர்ந்தேன்.

ஈனஸ்வரத்தில் ” யெஸ்’ என்றேன்.

“எனக்கு கம்பெனி தர முடியுமா ?இந்த ****** எல்லாரும் ஒரே நேரத்தில்தான் நரகத்திற்கு செல்கிறாற்கள்.” என மொபைல் போன் டூயுனில் அழகான ஆங்கிலத்தில் கேட்டாள். ( இந்த இடத்தில் எந்த உவமையும் எழுதக்கூடாது என முடிவு எடுத்து இருக்கிறேன்.)

“இட் இஸ் மை பிளஷர்”.இடம் மாறினேன்.

ஜென்ம சாபல்யம் இவ்வ ளவு எளிதாய்க் கிட்டும் என எண்ண வில்லை. அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

“ நான் உன்னைக் கவனித்து இருக்கிறேன்.நீ தினமும் என்னைப் பார்த்து விடும் ஜொள் மழையையும் கூட”. நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.” ஜொள் மழையை ஒரு பாருக்கே சர்வ் பண்ணலாமே”. இலவச இணைப்பாக இன்னொரு வாக்கியம்.

“ வெட்கமா...என்ன மனிதன் நீ”. அமைதியாய் இருந்தேன்.

“ ஏன் பியர் சாப்பிடுகிறாய்...ஏற்கனெவே சின்னத் தொப்பை இருக்கிறது உனக்கு”.தொப்பை என்பதற்கு ஆங்கில வார்த்தை உண்டு என்பதை அப்போதுதான் அறிந்தேன்

“ இல்லை . இதுதான் எனக்கு சரியாக வரும்” என்றேன்.

அவள் சியர்ஸ் சொன்னாள்.எனக்கு கை நடுங்கியது. புகைத்தாள். குடித்தாள்.மேசை நாகரிகம் மற்றும் ட்ரிங்கிங் மே னர்ஸ் என என்ன எல்லாமோ இவ ளிடம் கற்றுக் கொள்ளா வேண்டும் என எண்ணினேன். அவளிடம் ‘இதற்குப் பயிற்சி வகுப்புகள் உள்ளதா' எனக் கேட்க நாக்கு வரை வந்த கேள்வியை ஒரு சிப் பீர் குடித்து உள் தள்ளினேன்.. புரை ஏறியது.

“ என்னா மேன் சிறு பிள்ளையாய் இருக்கிறாய்..”

திடீரென இது இன்று ஒரு நாள் கனவாய் போய் விட்டால் எனக் கவலை வந்து விட்டது.

அவள் ‘ நான் லூ சென்று வருகிறேன்” என்று எழுந்தாள்.ஒரு நிமிடம் நின்று “ இவ்வளவு பியர் சாப்பிட்டும் இவ்வளவு நேரமாய் லூ போகாமல் இருக்கிறாய்”. போய் விட்டாள்.அவள் ஆச்சர்யப் பட்டுச் சொ ன்னாளோ இல்லை எனக்கு அந்த நாகரிகம் தெரியவில்லை என்பதாகச் சொன்னாளோ என்பதற்கு எந்த குளூவும் தராமல் சென்று விட்டாள்.

நான் என்னையே நொந்து கொண்டேன். என்ன படித்து என்ன பயன்..என்ன சம்பளம் வாங்கி என்ன பயன்...இது தெரியவில்லையே..சரியான கிரமத்தானாகவே இன்னும் இருக்கிறோம்.என்ன செய்யலாம் என யோசித்த போது” ராஜ யோக த்தைத்தொடர்ந்து, விபரீத யோகமாக என் நண்பன் “ பாச்சிப் பால்” நினைவு வந்தது.( பெயர்க் காரணம்- அவன் பெயரில் நாலு அல்லது ஐந்து பேர் நண்பர் குழாமில் இருந்தார்கள்.) அவன் ஒரு பெரிய பன்னாடுக் கம்பெனியில் பணி புரிவதால் பாதி நாட்கள் பார்ட்டி, எல்லாச் சனி இரவுகளிலும் டிஸ்கோ என இருப்பவன். அவன் போய் வந்து பெண்களுடன் குடித்ததைக் கேட்டுக் கேட்டே என் ஆசை விபரீத வளர்ச்சி அடைந்தது.அவன்தான் சரியான ஆள்.அதோடு நான் ஒரு பெண்ணுடன் மது அருந்துவதையும் சொன்ன மாதிரி இருக்கும் எனக் கால் பண்ணினேன்.

அவன் ”என்ன மதியம் 1 மணிக்கு போன் செய்கிறாய்” .

“ இல்ல மச்சி...ஒரு பிகர் கூட பார்ல இருக்கேன் அதான்”

“ அவள்ட்ட கொடு”

“ இல்ல அவ லூக்குப் போய் இருக்கா..ஆமா லூனா என்னடா”.அவன் மிமிக்ரி செய்வதில் வல்லவன்.மஹாநதி பூர்ணம் விஸ் வநாதன் ஸ்டைலில் “ கிருஷ்ணா....கிருஷ்ணா...அது அந்த பாரில் உள்ள காஃபி ஷாப்டா”

அவள் வந்து விடவும்” நான் அப்புறம் பேசரேண்டா”

அமர்ந்தாள். அப்பாடா என்ற உணர்வு அவள் முகத்தில்.

அப்புறம் சுமார் ஒரு இரண்டு மணி நேரம் குடித்தோம்,பேசினோம்.இதற்கிடையில் அவள் யாரிடமோ போனில் பேசுகையில் சிறு நீர் கழித்து வந்தேன்.

ஆனால் விடாமல் எனக்கு ஒரு எண்ணம் தொடர்ந்து இருந்து வந்தது. ஆல்கஹாலுடன் எப்படி காஃபி குடிக்கிறாள்...இல்லை ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றால் கூட இங்கேயே ஆர்டர் செய்யலாமே . அதுவும் இல்லாமல் இவ்வளவு நாகரிகம் அறிந்த பெண் ஏன் நம்மை அழைக்கவில்லை.

இதோடு விடாமல் நாளை பழைய பார்ட்டிகள்…வந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.இதற்கிடையில் வந்த போன்களுக்கு அவள் அன்றைய தினம் கமிட்டட் என்பதாகவோ இல்லை கம்பெனி உடன்
இருப்பதாகவோ பொருள் படும் வகையில் ஆங்கிலதில் ஏதோ பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

என்ன செய்து கவிழ்க்கலாம்.உறவைத் தொடரலாம்.ஏன் எனில் இவளுடன் சில நாட்கள் குடித்து விட்டால் சாவு வந்தால் கூட சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளலாம் என்ற மன நிலைக்குத் தள்ளப் பட்டு இருந்தேன்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து அவளிடம் நான் நாகரிகம் தெரிந்தவனாகவும் அதே சமயத்தில்அவளின் நாகரிகம் அற்ற தன்மையையும் ஒரே சமயத்தில் உணர்த்த விரும்பி அவளிடம் நான் இப்போது லூ போகப் போகிறேன்..உன்னால் கம்பெனி கொடுக்க முடியுமா எனக் கேட்டேன்.( மறுபடியும் நீள வாக்கியம்).

அவள் சிறிது நேரம் கோபம், ஆச்சர்யம், வெறுப்பு இன்னும் என்ன பல உண ர்வுகளடுனோ பார்த்தாள். தசாவதாரம் கமல் ரேஞ்ச்சுக்கு,அல்லது அ ந் நியன் விக்ரம் ரேஞ்ச்சுக்கு.

அதற்குப் பிறகு அவளை அந்த பாரில் நான் பார்க்கவே இல்லை பல மாதங்களுக்குப் பிறகும்.

மா வீரன் நெப்போலியனுக்குப் பல வெற்றிகளுக்குப் பிறகு வாட்டர் லூ வந்தது. என் கன்னி முயற்ச்சியே வாட்லர் லூ ஆகக் காரண ம் என்ன? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பின் குறிப்பு- பின்பு பாச்சிப்பாலிடம்போன் பண்ணிக் கேட்ட போது பாரில் யாரிடமும் குறிப்பாக பார் மேனிடமோ மேனேஜரிடமோ இதை உளறி வைக்காதே..ரெகுலர் கஸ்டமரைக் கெடுத்த பாவத்திற்கு அடித்தே வெளியே அனுப்புவார்கள் என்றான்.