Total Pageviews

Tuesday, August 16, 2011

வீழ் பொழுது

பிண ஊர்வலத்தில்
வீசி எறியப் பட்ட
மலர் ஒன்று
காலடிகள் பட்டு
கசங்கிய நிலையில்
என்னைப் பார்த்துக்
கேட்டது
"நான் இப்படி
இருக்க
உனக்கு
உசிதமா என்று?'.

Monday, August 15, 2011

ஆலிலை முத்தம்



உதிர்ந்து கொண்டு இருந்த
ஆலிலை மேலே
ஒட்டி இருந்த
ஒரு நீர்த் துளி கேட்டது.
"நீ முதலில் விழுவாயா
இல்லை நான் முதலில் விழுவேனா?".
"இப்போது அது இல்லை என் கவலை.
நான் முதலில் விழுந்து
நீ என் மேல் விழுந்தால்
நான் தாங்கிக் கொள்வேன்.
நீ முதலில் விழுந்து
நான் உன் மேல் விழுந்தால்
நான் உன்னைக் கொல்வேன்.
தனி தனியாய் விழுந்தால்
நீ உரு மாறுவாய்
நான் சிதைவேன்.
என்ன செய்வது?"
என்றது கவலையுடன்.

சிறிது நேர சிந்தனைக்குப்
பின்
இரண்டும் ஒன்றை ஒன்று
ஆரத் தழுவி
முத்தமிட்டுக் கொண்டன.