எலியால் வந்த கிலி
அவன் அலுவலகம் முடிந்து வந்து முகம் கழுவ குளியலறைக்குச் சென் றான்.முகம் முழுவதும் சோப்பு அப்பிய நிலையில் திடீரென ஒரு சத்தம் கேட்டு அவசர அவசரமாக தண்ணீர் விட்டு முகம் அலசினான்.முழித்த அவன் முன்னால் அந்த அதிர்ச்சி காத்து இருந்தது. ஒரு பெரிய...இல்லை மிகப் பெரிய எலி குளியலறையில் இருந்து தண்ணீர் செல்லும் பொருட்டு வைத்து இருக்கும் குழாயின் மேற்பரப்பில் இருக்கும் மூடியை உந்தித் தள்ளி அந்தக் குழாயின் அத்தனை அழுக்கோடும் ஒரு முறை உடலைச் சிலிர்த்துக் கொண்டது.அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் பயத்தில் உறைந்து போய் ஒரு முக்கு ஓரமாக ஒதுங்கி நின்றான். அதைக் கடந்துதான் ஹாலுக்குப் போக வேண்டும். அது வந்த காட்சி க்ராபிக்ஸ் இல்லாமலேயே ஆங்கிலப் படம் பார்த்த மாதிரி இருந்தது.
அதைப் பெரிய எலி என்பதை விடப் ”பெருச்சாளி” என்று அழைக்கலாம். அந்தப் ”பெருச்சாளி” ஒரு நிமிட ஆசுவாசத்திற்குப் பிறகு மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தது.அவனுக்குத் தலை மேலே அவனை அவன் முன்னோர்கள் அழைப்பது போல் ஒரு உணர்வு. அந்த ஜந்து அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தது. அவ்வளவுதான்..அலறினான் பாருங்கள்...அந்த அலறலில் அந்த ஜந்துவே பயந்து போய் மறு படியும் வந்த வழியே சென்றது.கண்டம் கடக்க வேண்டி இருக்கும் என ஜோஸ்யன் சொன்னது ஆசியாக் கண்டம் கழிந்து அமெரிக்கா போவோம் என எண்ணியது எவ்வளவு பிசகு என்று புரிந்தது. ஒரு வாளியில் நீர் நிரப்பி அந்த hole மீது வைத்து ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.
============================================
இதற்கிடையில் அவனுக்குச் சுண்டெலி என்றாலே பயம்.பயம் என்றால் சாதரணமான பயம் கிடையாது.”தெனாலி” கமல் மாதிரி “ எலி என்றா ல் பயம்..எலி வால் என்றால் இன்னும் பயம்.. சுண்டெலி என்றால் இன்னும் பயம்...” என்ற ரீதியில் பேசுவான். மும்பை வந்து மூன்று வருடம் கழித்து எலிப் பயம் வரும் எனக் கனவிலும் எண்ணவில்லை.
ஆனாலும் நிஜத்தில் வந்தது. திடீரென சின்னச் சின்ன எலிகள் அவன் வீட்டில் ஓட ஆரம்பித்தன. பயத்தின் காரணமாக அவன் அந்த எலிகளுக்கு எந்தத் தொ ல்லையும் செய்வது இல்லை. இதன் காரணமாகவோ இல்லை அந்த எலிகள் எவரிடமோ “ பதினாறும் பெற்று வாழ்க “ என வாழ்த்துப் பெற்றதாலோ பல்கிப் பெருகின. அவனது ஆடைகள் அவைகளுக்கு” கக்கா “ போகவும், அவனுடைய பீ ரோ அந்தப்புரமாகவும் மாறின. அவன் இப்போது எல்லாம் பீரோவைத் தட்டாமல் திறப்பதே இல்லை. ஏன் எனில் எந்த நேரம் என்ன கலவிக் காட்சி கண்ணில் பட்டுத் தொலையுமோ என்று தெரியாது.மேலும் அவன் சாஸ்திர , ஜோஸ்ய விஷயங்களை நம்பும் வழக்கம் உடையவன் ஆதலால், ஒரு வேளை நாம் அதன் கலவிக்கு இடைஞ்சல் செய்து , அவை அடுத்த பிறவியில் அவனாகப் பிறந்து அவன் அவைகளாகப் பிறந்து அவனின் கலவிப் பொழுதில் இடைஞ்சல் செய்தால் என்ன செய்வது என்ற ஒரு முன் எச்சரிக்கையும் கூட. அவனுக்கு எலியை அடிப்பதில் பயம் இருந்ததால் அவைகளுடன் எச்சரிக்கை யாக வாழத்தொடங்கி விட்டான்.
இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன் படுத்தி அவனது பீரோவை அந்தப்புரம் ஆ க்கி ஏகப்பட்ட இனப்பெருக்கம் செய்து விட்டன. எங்கு நோக்கினும்" எலி ராஜ்ஜியம்தான்”. ஒரே உல்லலாதான்.
அவன் ஒரு “ வான் ஹுசைன்” கால் சட்டை வாங்கி அணியாமல் ( விலை ரூபாய் 2900) , அதை என்றாவது ஒரு பிகரைப் பிக் அப் செய்யும் அன்று அணியும் எண்ணத்தில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வைத்து இருந்தான்.அதில் விளையாடி விட்டது எலிகள். அதைப் பாழ் பண்ணியதில் கூட கோவம் அதிகம் இல்லை.ஒரு வேளை அதன் மூலம் இனி எனக்கு பிகர் யோகமே இல்லையோ என ஒரு கேலி தென்பட்டதால் "பொறுத்தது போதும் பொங்கி எழு" என்ற நிலைக்கு வந்தான்.
அது சரி கூடு வாங்கி வைக்கலாம் எனப் பார்த்தால் பாதி எலிகள் ‘ குஞ்சு குளு வான்களாய் ” இருந்தன.வெளியே வந்து விடும். ஏதாவது மருந்து வாங்கி வைக்கலாம் என்று பார்த்தால் எங்கேனும் செத்துத் தொலைத்தால் வீடே நாறும் அபாயம் உள்ளது.( ஏற்கெனவே “ கக்கா ”வாசம் தாங்க முடியவில்லை.) எலி அடிக்க "அவுட் சோர்ஸ்" பண்ணுவதாய் முடிவு செய்து ஒரு ஆளை வரவழைத்தேன்."அவுட் சோர்ஸ்" காரன்( சுருக்கமாக osp) போட்ட நிபந்தனைகளுள் சில- “ சார் நீ என்னா பண்றே….மார்க்கெட் போய் நல்ல பெரிசு ஒண்ணு சிறுசு ஒண்ணுனு கொம்பு வாங்கி வை…..அப்புறமா உன் பக்கத்து வீட்டு ஐயரைத் துணைக்கு கூப்பிட்டு வை......சாயங்காலமா ஆபிஸூக்கு ஒன் அவர் பெர்மிஷன் போட்டுரு..”. நிறுத்தியவன் “ எனக்கு எலியைப் பிடிச்சோன களைப்பா இருக்கும், ரெண்டு பீரைப் பிடிச்ச்சுக்குனு வந்துரு”.
விதியே என்று எல்லாம் செய்து தொலைத்தேன்.பக்கத்து வீட்டு ஐயர் மன திற்குள்’ இவன் வீட்டு எலிக்கு நாம ஏன் பெர்மிஷன் போடணும்னு ” நினைத்து இருக்க வாய்ப்பு உண்டு.அந்த சுப வேளையும் வந்தது.மாலை ஆறு மணி அளவில் வந்தான்.இருப்பதே ஒரு ஹாலும் ஒரு சமையல் அறையும் ஒரு குளியலறையும்தான். ஏதோ கிரிக்கெட் அணித் தலைவர் மைதானத்தைப் பார்ப்பது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான்.பிறகு “ நான் ஏன் இந்த நேரத்துக்கு வரச் சொன்னேன் தெரியுமா ?” என்று கேட்டு எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.” எலிங்க எல்லாம் இன்னேரம்தான் டயர்டா இருக்கும்” என்று சொல்லி எங்களைத் திகைப்பில் ஆழ்த்தினான்.(மேட்சுக்கான strategy போ
லத் தோன்றியது). பிறகு என்னை ஒரு பீரோவுக்கு ஒரு புறம் ஒரு கொம்புடனும், மாமாவை சோபாக்கு அருகிலும் நிற்க வைத்தான்.( fielding set up?) மாமா கையில் விளக்குமாறு. பீரோவைத் திறந்து உடன் மூன்று குட்டி எலிகள் osp மேல் தாவிக் கீழே குதித்து ஒன்று சோபா அடியிலும், ஒன்று டிவி ஸ்டாண்ட் அடியிலும்,ஒன்று சமையல் அறைக்கும் ஓடியது.Ospயோ காற்றில் கொம்பை இந்தியன் மட்டை வீச்சாளர்கள் போல் வீசிக் கொண்டு இருந்தான். வழ்க்கம் போல் ஒரு அடி கூட எலியின் மேல் விழவில்லை. இவ்வளவு இழுத்துச் சொல்லும் அளவுக்கு ஹால் ஒன்றும் பெரிசு இல்லை. ஒரு 100-125 சதுர அடி மட்டுமே இருக்கும். இந்த அளவு அறையில் மூன்று பேரும் எ லிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடியதில் மாமாவுக்கு வேட்டி அவிழவும் ‘ என் ஆட்டம் அவ்வளவுதான்” என hurt retired ஆனார். கடைசியில் அவர்களது அணி க்கும், எலிகள் அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் முடிந்தது.Osp இறுதியாகச் சொன்னான்.” நாந்தா அப்பவே சொன்னேன் இல்ல...அதுங்க களை ச்சுத் தூங்கப் போயிருச்சு போல இருக்கு.. நாம தாக சாந்தி செய்யலாம்”.பீர் குடித்து ஆம்லெட்டும், சிக்கன் ரைசும் சாப்பிட்டு எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிப் போனான்.இதற்கிடையில் Osp செய்த ஒரே நல்ல காரியம் பொந்துகளைக் கண்டு பிடித்து ஒயிட் சிமெண்ட் வைத்து அடைத்தான் “ இன்னா ப்பா நீ தமாஸா சொல்லுவியே ஒரு சின்னப் பொந்துல இருக்கேன்னு..மெய்யா லுமே அப்படித்தான்” என்ற வருணனையோடு.
காலையில் Osp போகும்போது ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுப் போனான்.” நீ இன்னாப்பா போதையில தூங்கிட்ட...எலிங்க எல்லாம் உன் தொப்பை மேல ஏ றி விளையாடுதுங்க”.
எலியைப் பற்றி அளவுக்கு அதிகமாகப் பேசி விட்டோம். முக்கியமான “ கிலி” விழயத்திற்குப் போக வேண்டி இருப்பதால், அவன் அவனுடைய சொந்த மா வட்டமான “ நெல்லை” யில் இருந்து professtional killers அல்லது அடியாட்க ள் வரவழைத்து ஓரளவு எலிகளை ஒழித்துக்கட்டிய கதையை விவரிக்க விரும்ப வில்லை…
==========================================================================
அதன் முன்னால் அவனுடைய மூன்று விஷயங்களை அறிந்து கொள்வது உசிதம்.
1) ஒரு முறை அவனுடைய குறியைச் சுவைத்து விட்டு அவன் பெண் தோழி சொன்னது” காட்பரீஸ் மாதிரியே நல்லா இருக்கு”. குறியின் அமைப்பை, வண்
ணத்தை,சுவையை இதில் எதை வைத்து அவள் எண்ணத்தைச் சொன்னாள் என அவனுக்குத் தெரியாது.
2)மணிரத்தினத்தின் “ இருவர்" படம் அவனால் மறக்க முடியாத படம். படத்தின் தரத்திற்காக இல்லை.படம் பார்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்காக.அவனும்(அவன் காதலித்த போது) அவன் காதலியும்,அடிக்கடி திரைப்படம் செல்வது வழக்கம். முக்கியக் காரணம்-இருளில் நீண்ட நேரம் கழிக்க முடியும் என்பதால். ‘இருவர்' படத்துக்கு முதல் நாளே ‘உட்லேண்ட்ஸ்” ( சென்னை) அரங்கில் கூட்டம் இல்லை. வழக்கமாக அவர்கள் "கார்னர் இருக்கை கலாச்சாரவாதிகள்".( கார்னர் இருக்கை எதற்கு என்று கேட்பவர்கள் தயவு செய்து படிப்பதை நிறுத்தி விட்டு cartoon சேனல் பார்க்கப் போங்கள்.) கார்னர் இருக்க்கை வாங்க அவன் வழக்கமாக கடைப்பிடிக்கும் வழி.அவளை டிக்கட் வாங்க அனுப்பி பக்கத்தில் நின்று கொண்டு டிச்கெட் கொடுப்பவரை கெஞ்சும் விதத்தில்பார்க்க வேண்டும். அதிகமான இடத்தில் இது workout ஆகி உள்ளது.அன்று அதற்கு
தேவையே இல்லாமல் போனது.கூட்டமே இல்லாததால் டிக்கெட்வழங்குபவர் B12,B13 இருக்கைக்கான டிக்கெட்களை வழங்கினார்.அந்த இருக்கைகள் கார்னர் இருக்கைகள் இல்லை என்ற போதிலும் அதை விட வசதியானது.( அவர்களுக்கு எந்தத் திரை அரங்கில் எந்த கார்னர் இருக்கைகள் என்ன என்ன வசதிகளுடன் இருக்கும் என அத்துப்படி). B12,B13 இருக்கைகள் அரங்கத்திற்கு வெளியில் இருந்து உள்ளே மேல் நோக்கி வரும் வாயிலுக்கு வலதுபுறமாக ஒரு தொட்டி அல்லது குழி போன்ற அமைப்பில் இரண்டே இரண்டு இருக்கை மட்டுமே இருக்கும். மேல் இருக்கையில் இருந்து பார்ப்பவர்கள் கூடத் தலைவரை மட்டுமே பார்க்கமுடியும்.
வழக்கம் போல் "அரங்கக் களி ஆட்டம்" துவங்கியது.முத்தத்தில் துவங்கி, முலை தடவலில் முன்னேறி இறுதியில் அவன் ஜிப்பவிழ்ப்பில் வந்து நின்றது.மேலும் இந்த சம்பவத்தை நேரடி வருணனை செய்யும் உத்தேசம் இல்லை. கிலி விஷயத்திற்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அவள் அவனிடம்சொன்னது-” முதல்ல சுண்டெலி மாதிரிதான் இருக்கு.கைய்ய வைச்ச உடன் பெருச்சாளி மாதிரி ஆய்டுது”.
உபரித் தகவல்-தொடர்ந்து மூன்று நாட்கள்,”சுண்டெலி-பெருச்சாளி” விளை யாட்டுக்காக அதே படத்துக்கு அதே இருக்கை கேட்கவும் டிக்கெட் கவுண்டரில் ஒரு மாதிரியாய்ப் பார்த்ததால் நாலாம் நாள் அரங்கு மாற வேண்டியதாய் ஆகி விட்டது. ஒரு வேளை “மணி"க்குத் தெரிந்து இருந்தால் அவர்களைக் கூப்பிட்டு பாராட்டி இருக்கக் கூடும்.இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்த ஒரே ஜோடி என்பதால்.
3)அவனுக்கு பெரும்பாலும் குறைந்த ஆடையுடன் இருப்பது பிடிக்கும். குறிப்பாகப் படுக்கையில் ( தூங்குகையில்) நிர்வாணமாக அல்லது ஒரு சிறிய துணியுடன் தூங்குவது மிகவும் பிடிக்கும்.
அந்தப் பெருச்சாளி வாளியின் அடிப்பகுதியை முட்டிக்கொண்டு இருந்தது. அந்தச் சத்தம் அவனின் பயத்தைக் கூட்டியதால் போத்தல் பியரைக் குடித்துத் தூங்கப் போனான்.அவனிடம் ஒரு பழக்கம் உண்டு. ஏதாவது தீவிரமான உணர்ச்சியுடன்/ எண்ணத்துடன் படுக்கப்போனால் அந்த உணர்ச்சி அல்லது எண்ணம் சம்பந்தமாக அவன் உள் மனம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும்.எவ்வளவு போதையில் இருந்தாலும் கூட.
உள் மனம் இரவு மூன்று மணிவாக்கில் முழித்துக் கொண்டது.ஏற்கனெவே அவனின் குறி "காட்பரீஸாக" எண்ணப் பட்டது. சுண்டெலி பெருச்சாளி ஒப்புமை வேறு.அன்று இரவு பொட்டுத் துணி இல்லாமல் தூங்கிக் கொண்டு இருந்தான். ஒருவேளை அந்தப் பெருச்சாளி வெளியே வரும் வேளை யில் அவனது குறி "காட்பரீஸாக"த் தோன்றி அதைச் சுவைக்கும் எண்ணம் வந்தால்? இல்லை இன்னொரு பெருச்சாளியாகத் தோன்றி கலவிக்கு அச்சாரம் போட்டால்? இல்லை சுண்டெலி என எண்ணி விளையாட முற்பட்டால்?
படக்கென முழித்துப் பார்த்தான்."கும்பிடப் போன தெய்வம்" குறுக்கே நின்ற மாதிரி குறி நின்று கொண்டு இருந்தது சேதாரம் எதுவும் இல்லாமல்.
பின் குறிப்பு- "அவன் தினமும் அதிகாலையில் அவனது மொபைலில் பதிந்து வைத்து உள்ள ஒரு தெய்வத்தின் தின அபிஷேக, கற்பூர ஆரத்தியிலோ இல்லை அவன் விருப்பமான கடவுளின் படத்திலோ அல்லது குறைந்த பட்சம் உள்ளங் கைகளிலோ கண் முழிப்பது வழக்கம்" என்பது எனக்குத் தெரியும்.
.
5 comments:
ஏனய்யா சூரியா, காட்பரீஸ் மாதிரி இருக்கும்னு எழுதினால் எவளாவது ஒருத்தி அதெப்படி மூத்திரவாடை அடிக்கும் அது இவனுக்கு மட்டும் காட்பரீஸ் சாக்லெட் ஆக இருக்கும்னு நினைச்சு, என்னதான்னு இருக்குன்னு பார்த்திருவோம்னு வருவாள்னு நாக்கை தொங்கப் போட்டுக்கினு இருக்கீகளா ?
தொஙகப் போட்டு இருப்பது என்னவோ நிஜம்தான்..ஆனா நீங்க சொல்ற மாதிரி நாக்கை இல்லை..
You have your own destiny..Follow it..accept it...
Every man is left alone in this world. Don't depend on OSPs and neighbour uncles.
Ha...Ha...Ha...Ha...
Beautiful metaphors!
எலியோ அல்லது கிலியோ கடிச்சு வைக்கப்போறது.... அப்புறம் கரும்புதான், துண்டுதான்...
ஐயா,
தங்க வேல், நீங்கள் நல்லவர், அப்பாவி என்பது எனக்கு நன்றாகத்தெரியும். ஆ னா ல், “ சினிமாவில்சின்னப் பிள்ளை பயமுறுத்தும அளவுக்குவடிவேலாக நல்லவராக, அப்பாவியாக இருக்கலாமா?
பில் கிளின்டன் தொடங்கி, சமீபத்தில்டெல்லிப் பள்ளிமாண வர்வழியாக( மொபைல்முதல் இண்டெர் நெட் வரை பிரசித்தம்) , சிறைச் சாலை உள்ளடிக்கி , ஹோ மோ செக்ஸ் வரை “ மூத்திர வாடையுடந்தான் ” வாய்ப் புண ர்ச்சி” நடக்கிறதா?
Post a Comment