மழை
வருமா வராதா என
அறிய முடியாதவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வரும் என
உறுதியாக உணர்ந்தவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வராது என
நம்பியும்
எடுத்து செல்பவர்களின் குடை
அனைத்தையும் அமைதியாக
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தது
பெய்வோமா
பெய்ய மாட்டோமா என
அறியாத அந்த .மழை.
குடை விற்பவனோ
குடை இல்லாமல் வருபவர்களை
எதிர் நோக்கி இருந்தான்
குடும்பக் கவலையோடு.