Total Pageviews

Friday, September 12, 2008

பீஜம் சின்னது - உருவான கதை ( MAKING OF -PEEJAM SINNATHU)


அவனால் எனக்குப் பிரச்சனை வராத நாள் இல்லை. ஆனால் இந்த முறை இந்த ரூபத்தில் வரும் என எண்ணவில்லை.
நான் பதிவுகளுக்கு வழக்கமாக முன்,பின் அல்லது என் குறிப்புகள் போடுவது வழக்கம். நான் செய்த ஒரே தவறு 'பீஜம் சின்னது' 'அவனுடைய' முயற்சி என்பதைப் போட மறந்து விட்டேன். நேற்று நண்பர் 'ரமணி' வீ ட்டுக்குச் சென்ற போது என்னைத் தனியாக அவரது சகோதரர் அழைத்து 'உங்கள் பீஜம் சின்னதா? எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் உள்ளார்' என்ற ரீதியில் ஆரம்பித்து விட்டார்.எனக்குத் தர்ம சஙகடம் ஆகி விட்டது. 'இல்லை ஐயா .எனக்குத் தேவையான அளவு வளர்ந்து உள்ளது' எனத் திறந்து காண்பிக்கவா முடியும்?
அவன் இன்று வந்தவுடன் மேற்கண்ட நிகழ்வைச் சொல்லி அவனிடம் கேட்டேன்.
” ஏன் இந்த விபரீத முயற்சி மேற் கொள்கிறாய்?பேசாமல் 'ஜ்வரோம் சுந்தருக்கு' ஒரு அதீதன் போல எனக்கு நீ இருந்து விட்டுப் போயேன்? கதைகளை, நிகழ்வுகளை மட்டும் சொல்லி விட்டுப் போயேன். நாங்கள் எழுதிக் கொள்கிறோம்.'
‘ஏன் என்னால் எழுத முடியாதா? உனக்குப் பொறாமையா?'
இவனுடன் பேச முடியாது.' சரி உன் சொந்த அனுபவமா அது?' என்றேன்.
” நீங்கள் எல்லாம் சொந்த அனுபவத்தைதான் எழுதுகிறீற்களா? நீ ‘
ராஸ லீலா' தந்தாய் அல்லவா? அதைப் படிக்கையில் 'பீஜம் சின்னது' என இரண்டு இடத்தில் வரும். சில வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் படித்த உடன் ‘பச்சக்கென' மனதில் ஒட்டிக் கொள்ளும். உள்ளூர் தமிழ் பேப்பர் ஞாயிறு அன்று வாங்கிப் படித்தேன்.குறியை நீட்ட, உச்சம் அதிகரிக்க, கள்ளக் காதலை விடுவிக்க, வசியம் வைக்க இப்படி ஏகப் பட்ட விளம்பரங்கள். இரண்டு புள்ளிகளையும் இணைத்தேன். அவ்வளவுதான்.'
‘சரி' என்றேன்.
திடீரென நினைவுக்கு வந்தவனாக 'உனக்கு பீஜம் எப்படி?' என்றான்.
‘இப்ப ரொம்ப அவசியம் இது. நான் பிரம்மச்சாரி எனபதையும் இன்னும் கன்னி கழியாதவன் என்பதையும் மறந்து கிளறுகிறாய். உன் போல பூத்த முல்லையோ இல்லை ஒரு பூசணிக்காயோ இல்லை முதிர் கன்னியோ இல்லை முட்டைக் கோஸோ முதலில் கிடைக்கட்டும். அப்புறமாய் என் விஷயம் பற்றிச் சொல்கிறேன்' என்றேன் எரிச்சலுடன்.
அப்புறமாக பல விஷயங்கள் பேசி விட்டு கிளம்புகையில் கேட்டான்.'இதை பதிவேற்றம் செய்யப் போகிறாயா?'
‘செய்யலாம் என்று இருக்கிறேன்.'
‘என்ன தலைப்பு வைக்கப் போகிறாய்?'
‘இன்னும் யோசிக்கவில்லை.'
‘பேசாமல் MAKING OF PEEJAM SINNATHU' என்று வைத்து விடேன்.'
நான் மவுனமாக முறைத்துப் பார்த்தேன்.
‘ஏன் ரஜினி, கமல், சங்கர் படங்களுக்கோ இல்லை பிரபல ஆங்கிலப் படங்களுக்கோ மட்டும்தான் Making of இருக்க வேண்டுமோ?'என்று கூறி விட்டுக் கிளம்பினான்.

No comments: