எலியால் வந்த கிலிக்கு எதிர்வினை கள்.
கோவை நண்பர் படித்து விட்டு எழதியதை அப்படியே "அவனுக்கு" பார்வர்ட்
செய்தேன். அந்த விவரம் இதோ."ஏனய்யா , காட்பரீஸ் மாதிரி இருக்கும்னு எழுதினால் எவளாவது ஒருத்தி அதெப்படி மூத்திரவாடை அடிக்கும் அது இவனுக்கு மட்டும் காட்பரீஸ் சாக்லெட் ஆக இருக்கும்னு நினைச்சு, என்னதான்னு இருக்குன்னு பார்த்திருவோம்னு வருவாள்னு நாக்கை தொங்கப் போட்டுக்கினு இருக்கீகளா ?". அவனது பதில் இதோ."தொஙகப் போட்டு இருப்பது என்னவோ நிஜம்தான்..ஆனா நீங்க சொல்ற மாதிரி நாக்கை இல்லை.."
நான் இந்த வாக்கு வாதத்தில் பங்கு கொள்ள விரும்பவில்லை.ஆனால் எனக்கு ஒரு சின்ன ஆச்சர்யம் மட்டும்தான். இந்த " வரலாற்றுப் புகழ் நிகழ்வில் " மூத்திர வாடையைப் பற்றி சிந்தித்து உள்ளாரே என்பதுதான்.அவருக்கு சந்தேகம் தீர வழி உள்ளது. பேசாமல் " பில் கிளிண்டனுக்கு" வாய்ப் புணர்ச்சி" செய்ததாக பரபரப்பாகப் பேசப் பட்ட பெண்ணிடமோ , இல்லை சமீபமாக டெல்லியில் ஒரு சக மாணவனுக்கு " வாய்ப் புணர்ச்சி" சாகசம் செய்த ("புளூ டூத்", internet உதவியால் உலகமெங்கும் அறிய முடிந்தது) மாணவியிடமோதான் கேட்க வேண்டும். இல்லையேல் ஏதேனும் சிறை வாசிகளிடமோ,
( ' நீஉன் பின் புறம் தந்தால் என் வாய் உனக்கு', என்பது அடிக்கடி அஙகு புழங்கும் வாக்கியம். அல்லது vice versa), சென்னையில் பூங்காக்களில் ( அதற்கெனவே தனி இடங்கள் உள்ளன) " வாய்ப் புணர்ச்சி" செய்பவர்களிடமோதான் கேட்க வேண்டும்.
**********************************************************************************************************************************
பங்களூரு நண்பர் ஒருவர் ‘பதிவு நன்றாக, விறுவிறுப்பாக இருந்தது.ஆனால், காட்பரீஸ்தான் கொஞ்சம் ஓவர்’ என்றார். அதை அவனிடம் கூறினேன்.அவன் " என்னோடது கொஞ்ச ஓவர் சைஸ்தான், ஆனா அவருக்கு எப்படித் தெரியும? என்று பதில் சொன்னான்.
===============================================================================
எனக்கு காரைக்குடியில் படித்த போது ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சீனிவாசன். நீண்ட நாட்களாக தொடர்பு இல்லை.ஆனால் எனது மெய்லிங் லிஸ்டில் அவரது மின் அஞ்சல் முகவரியும் இருந்ததால் என் எல்லா மெய்ல்களையும் அவர் பெறும் வாய்ப்பு உண்டு. அவருக்கு வாசிக்கும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் வெகு ஜனப் பத்திரிகை படிப்பது அவரது வழக்கம். என்னுடிய வலைப்பூவின் தொடர்பை அவரும் பார்த்துப் படித்து விட்டு எனக்கு போன் செய்தார் பல வருடங்களுக்குப் பிறகு.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு " நீயும் எழத ஆரம்பித்து விட்டாயா?" எனக் கேட்டார்.
" ஆமாம்"
" செக்ஸ் கதை எல்லாம் எழுதுகிறாய் போல உள்ளதே?"
"அடப் பாவி அப்படியா தோன்றியது? அவனிடம் சொல்கிறேன்"
"நீ 'முன்னால்' பால குமாரனைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்தாய். இப்போது என்னன்னா குறி, காட்பரீஸ்னு அசிங்கமாக எழுதுகிறாய்?"
" மன்னிக்கவும்.நான் அவனுடிய அனுபவங்களை எனது வலைப்பூவில் அனுமதிக்கிறேன்.'நான் அவன் இல்லை'. அவன் யாரைப் படிக்கிறான் என்றும் எனக்குத் தெரியாது."
" அது சரி நிலை இப்போது யாரைப் படிக்கிறாய்?"
" சாருவை"
" அது யார்?'. வலைத் தள தொடர்பைக் கொடுத்தேன்.
*****************************************************************************************************************************
ஒரு இரண்டு நாட்கள் இருக்கும். மறுபடியும் அன்பரிடமிருந்து போன் வந்தது.
" என்னப்பா இது இப்போதான் நீ எப்படிக் கெட்டுப் போனாய் என்று தெரிகிறது. ஒரு 'காப்பி' எடுத்து நம்ம ஊரில் காட்டினால் ஒரு பய பொண் கொடுக்கமாட்டான் தெரியுமோ இல்லயோ?"
" 'நான் அவன் இல்லை'.அவன் வேறு நான் வேறு.'கடவுளும் நானும்' , "உலக இசையினூடாக ஒரு பயணம் எல்லாம் கண்ணில் பட வில்லயா?"
" எப்படியோ ஊரை ஏமாத்து" உரையாடல் இப்படியாக முடிந்தது.
**********************************************************************************************************************************
இரண்டு நிமிடங்களில் மீண்டும் அலை பேசி அழைத்தது.நம்புங்கள் இரண்டு நிமிடம்தான். எண்ணைப் பார்த்தேன்.அவர்தான்.
இப்போது குற்றம் சாட்டும் தொனி போய், சிறிது தயக்கத்துடன் " உண்மையிலேயே அந்தக் "குறி சுவைத்தல்' உண்மையான விழயம்தானா இல்லை ”பெப்’புக்காக எழுதப் பட்டதா?'
" திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.' நான் அவன் இல்லை'.வேண்டும் என்றால் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்".
" சரி. கோபப் படாதே. எனக்குத் தெரியும் நீதான் அவன் என" என மறுபடியும் கோபப் படுத்தினார்.
" சரி சரி, உன் அனுபவத்தை சொல்லேன்."
"நண்பரே நான் இன்னும் பிரம்மச்சாரி. மறந்து விடாதீர்".
" அடேய் கள்ளா . சின்ன வயதிலியே உன் சிருங்கார லீலைகளை நான் நன்றாக அறிவேன்.என் வீட்டுக்கு வந்த என் சொந்தக் காரப் பெண்ணைச் சுற்றி வந்த கதை தெரியும்.அவளும் உன் மேல் பிரேமையாய் இருந்ததை அறிவேன்."
" சரி. எனக்குத் தெரிந்த வரையில் அது நடக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் சாதாரணப் பெண்ணோ, மனைவியோ சம்மதிப்பார்களா என்று தெரியாது. நீர்தான் திருமணம் முடிந்தவர் ஆயிற்றே. பின் என்ன தயக்கம். முயற்சி பண்ணிப் பாருமே."
" அதற்குத்தான் நான் உன்னை அழைத்தேன்".ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போய் விட்டேன். அவருக்கு வயது ஒரு அம்பதுக்கு மேலே இருக்கும்.
" என்ன உளறுகிறீர்? நான் உமக்கும் பண்ணி விடச் சொல்கிறீரா? இல்லை என்னை உம் மனைவியிடம் சிபாரிசு செய்யச் சொல்கிறீரா?"
" அது இல்லை.எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளாக இருக்கு. ஆனால் இது வரைக்கும் இது எல்லாம் சும்மா ஒரு இதுக்குச் சொல்றாங்கன்னு நினைத்து விட்டேன்."( எத்தனை இது? )
" சரி ஐயா, பேசாமல் உன் மனவியிடமே கேட்டு விடுமே" .
" அங்குதான் இடிக்கிறது'
" இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே ஐயா. பின் எது எது இடிக்கிறது. அதுவும் இந்த வார்த்தை அவங்க இல்லை சொல்லணும்"
" இல்லை. கல்யாணம் பண்ணி இவ்வளவு நாளுக்கு அப்புறமா இதை நான் கேட்டேன் என்றால்,' எப்படி ஒய் உமக்கு இப்போது தெரிந்தது? அப்படி என்றால் இப்போது உமக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்குத் தொடர்பு உள்ளதா? இல்லை ஏதேனும், அந்த மாதிரிப் படம் இன்னும் பார்க்கிறிறா? பொண்ணு வயசுக்கு வந்துட்டா மனசுல இருக்கோன்னோ. இல்லை எந்தக் கருமாந்தரம் பிடிச்சவன் சொல்லித் தரானோ அந்த கருமாந்தரம் பிடிச்சவன் கட்டையில போக?' என்று ஆரம்பித்தால் தினசரி ராத்திரிச் சாப்பாடு கூடக் 'கட்' ஆகும் வாய்ப்பு உள்ளது.( அவர் சாப்பிடும் சாப்பாட்டைத்தான் சொல்லி இருப்பார் என எண்ணுகிறேன்.)
" ஐயா அப்படி என்றால் இன்னொரு வழி உள்ளது. நீர் ஒரு ஐட்டமிடம்தான் போக வேண்டும் இந்த வயதில்".
" ஈஸ்வரா".என்றார்.
" ஆளை விடும்" என்று அலை பேசியை துண்டித்தேன்.
என் குறிப்பு-சாரு சில சமயம் தமிழ் வாசகர்களை, வாசிப்புத் தன்மையை, போலி மதிப்பீடுகளை பற்றிக் குறிப்பிடும்போது எல்லாம் " கொஞ்சம் ஓவரா இவர் பண்ணுகிறாரோ" என எண்ணுவேன்.இல்லை சாருவின் மதிப்பீடுகள் 500% உண்மை என்று அறிந்து கொண்டேன்.
3 comments:
மும்பையில் மழை என்றல்லவா கேள்விப்பட்டேன். இதென்ன கலாட்டா?
it is not surprise. it would have been little more fun one..
ha ha.. nice anubhavam...ungakitta phone panni kettadhu dhaan highlight...
Post a Comment