Total Pageviews

Wednesday, December 22, 2010

மழைக்கு முன்னே

மழை
வருமா வராதா என
அறிய முடியாதவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வரும் என
உறுதியாக உணர்ந்தவர்கள்
எடுத்து செல்லும் குடை
மழை வராது என
நம்பியும்
எடுத்து செல்பவர்களின் குடை
அனைத்தையும் அமைதியாக
வேடிக்கை பார்த்துக்
கொண்டு இருந்தது
பெய்வோமா
பெய்ய மாட்டோமா என
அறியாத அந்த .மழை.
குடை விற்பவனோ
குடை இல்லாமல் வருபவர்களை
எதிர் நோக்கி இருந்தான்
குடும்பக் கவலையோடு.

No comments: