Total Pageviews

Saturday, December 12, 2009

இரசீது


காலை கண்
விழிக்கையில்
கட்டில் காலிலும்
உள்ளாடையின் ஓரத்திலும்
கண்ணில் பட்ட
நேற்று இரவு
வந்தவளின்
துப்பட்டாவின்
ஜரிகை இழைகள்
பெற்றுக் கொண்ட பணத்திற்கு
நன்றியுடன்
வைத்து விட்ட
இரசீது போலத்
தோன்றியது.

No comments: