Total Pageviews

Monday, December 14, 2009

குவார்ட்டர் பாட்டில் ..........பாட்டில் ஆன கதை

அலை பேசி அழைத்தது .கதை சொல்லிதான்.ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான். எனினும் பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால் எடுத்துப் பதில் சொன்னேன்.

"என்ன பார்த்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன் .

"சும்மா நம்ம கிராமத்துல போய் இருந்துட்டு வந்தேன்."

எனக்கு மனதில் உள்ளூற உதறல்தான்.கேட்டே விட்டான்.

"நாம மீட் பண்ணலாமா ?" கேள்வி எழுப்பினான்.

பைக்குள் பார்த்தேன். பணம் இருந்தது ." சரி வா" என்றேன் .

" பார்ட்டி உண்டு இல்லையா ?". இல்லை என்றால் விடப் போகிறாயா என மனத்திற்குள் சபித்துக் கொண்டு " கட்டாயம் " என்றேன் .

வரலாற்று ரீதிக்கு 'வந்தான் வென்றான்' ( அதாங்க நல்லாக் குடித்தான்) . ஓர் அரை பாட்டிலைக் காலி செய்தவுடன் ஆரம்பித்தான் கச்சேரியை.

" கிராமம்னா கிராம்தான் " என ஆரம்பித்தான்,

உடனே " என்னப்பா கிராமம்னா கிராமம்தானே " என்றதற்கு
" என்ன நீ வாங்கிக் கொடுத்ததால நக்கலா ?" என முறைக்கத் துவங்கினான்.

உடனே அவனைக் கூல் செய்யும் விதமாக " இல்லப்பா உன்னை எதிர் பார்த்து வலைப் பூவில் ரசிகர்கள் காத்திகிட்டு இருக்காங்க. அதான் ....."

" அப்படிப் பேசப் பழகு. என் வெயிட் உனக்குத் தெரியும் இல்லே"

மனதிற்குள் உன்னை நான் எப்போது தூக்கிப் பார்த்தேன் என நினைத்துக் கொண்டேன்.

" தெரியாதா..நீ சொல்லு மாப்ளை "

" ஊர் ரொம்பக் கெட்டுப் போச்சு. இம்பூடூண்டு என் 'விர'த் தண்டி இருக்கற பயக்க எல்லாம் குடிக்க ஆரமிச்சுட்டான். நான்லாம் பிளஸ் டூ படிக்கைல ( சந்தடி சாக்குல ஒரு கப்சா ?) மொத மொத குடிக்க ஆரமிச்சேன் பயந்து பயந்து . அதவும் அஞ்சு வருஷம் கட்டிங் தாண்டல.இப்போ எல்லாப் பய புள்ளையும் 'ஹாப்' அடிக்கு. ஏ.. உனக்கு அந்த மண்டபம் தெரியும் இல்ல. அங்கன தெனம் நைட் பாட்டில் பாட்டிலா ஓடுதுடே ."

நிறுத்தி என்னை உற்று நோக்கினான். அதன் பொருள் ' கிளாஸ் காலி ஆயிருச்சு டுபுக்கு ஊத்து' என்பது அவனுடன் பல வருடங்களாகக் குடிக்கும் எனக்குத் தெரியாதா என்ன?

"இந்தப் பயக்க டக்குனு 'ஐட்டி' பாருக்குப் போய் சரக்கு வாங்கிட்டு வந்துருதான். நம்ம " சிங்கம்' இருக்கு பாரு .அதுக்கு இதே வேலைதான் ... ஒவ்வொருத்தனுக்கும் தினம் வாங்கிக் குடுத்திட்டு ஒரு கட்டிங் கமிசன் அடிச்சுருதான்.....".

திடீரென்று அங்கும் எங்கும் பார்த்தவன் " என்ன மாப்ளை தீந்து போச்சா ?" என்றவன் நேராக பிரிட்ஜ் பக்கம் போய் திறந்து உள்ளே உள்ள புது பாட்டிலை எடுத்துக் கொண்டே " ஏன் மாப்ளைனா மாப்ளைதான் எனக்குத் தெரியும் வே..நீர் உள்ள வைச்சு இருப்பீர்னு...இரும் ..ஒரு தம் அடிசுகிடுதேன் "

பற்ற வைத்து ரெண்டு மூன்று இழுப்பு இழுத்து விட்டு பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.எனக்குப் பகீர் என்றாகி விட்டது.

" ஒரு சேதி சொன்னா நீரும் விழுந்து விழுந்து சிரிப்பேறு. நம்ம ஊர்ல ரவுண்ட் ஜட்டி போட்ட பாதி பயக்க ரெண்டு பை வச்ச நீள ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான். ஜட்டி போடாத பயக்க ஜட்டி போட ஆரம்பிச்சுட்டான்".

எனக்கு 'என்ன டிராக் மாறுகிறதே...மப்பாகி விட்டானா ' எனத் தோன்றியது . அவனாவது அவ்வளவு சீக்கிரம் மப்பு ஆவதாவது .

"சில சமயம் ரெண்டு மூணு 'கோட்டார்' வாங்க வேண்டி வருதா ....கையில கொண்டு வந்தா சிக்கல்னு ஜட்டி பாக்கெட் உள்ள வச்சுக்கிட்டு வந்துருதானுவே.....ஜட்டி போடலையுனா இடுப்புல சொரிகின
'கோட்டார்' கீழ விழந்தரும்னு ஜட்டி போட்டு அதுல சொருகி எடுத்துக்கிட்டு வாராங்க ...."

"அன்னைக்கு அப்படித்தான் நான் மண்டபத்தில ஏழு மணிக்கு உக்காந்து இருந்தேன். நம்ம 'சிங்கம்' வந்துது. நம்ம 'அடேங்கப்பா' ( பெயர்க் காரணம் - எதற்கு எடுத்தாலும் - அடேங்கப்பா சாப்பாடு என்னமா இருந்துது ...அடேங்கப்பா சினிமா எப்படி எடுத்து இருக்கான் ....அடேங்கப்பா என்னமா இருக்கு முலையும் குண்டியும்.....அடேங்கப்பா என்னமா போடுதான் ( நீலப் படம் பார்க்கையில்)......அடேங்கப்பா 'சிங்கத்துக்கு எம்புட்டு நீளமா கிடக்கு .....இத்யாதி இத்யாதி ) புல் மப்புல இருந்தான். சிங்கம் வந்த உடனே 'ஏல சிங்கம்' மரியாதையா லுங்கிக்கு உள்ள உள்ள 'கோட்டரைக் குடுல ' ன்னான். சிங்கம் 'அண்ணே' ஒண்ணும் இல்லை" ன்னான். இவன் விட மாட்டேங்கான்....'ஏல மரியாதையா அண்ணனுக்குத் தாரியா ..இல்ல "னு லுங்கிய இழுக்கப் போனான். அவன் லுங்கியக் கெட்டியா புடிச்சிகிட்டே ' தூர விடுங்கண்ணே' ன்னான்.இப்படியா பத்து நிமிஷம் இவன் இழுக்க அவன் தடுக்க .....ஒரே களேபரம்தான்."

சொல்லிக் கொண்டே வந்தவன் அமைதியானான். திரும்பிப் பார்தால்
பாட்டிலும் காலி அவனும் காலி.

எனக்கோ கதை பாதியில் நிற்கிறதே என எழுப்ப முயற்சித்தேன் அவனை. முடிய வில்லை. நானும் தூங்கிப் போனேன்

பின் குறிப்பு- காலையில் எழுந்ததும் கண்ணில் பட்டது என் தலை மாட்டில் ஒரு காகிதம்.அதில் - "இப்படி சண்டை அவங்க ரெண்டு பேரும் போட்டதால எனக்கு மண்ட காஞ்சு போச்சு. கோவம் வந்து " ஏல பேக் கூதிபாத்து...பத்து நிமிசமா அங்கனேயே கைய வச்சு நொரை நாட்டியம் பண்ணுதியே....'கோட்டர்' பாட்டில் 'பீர்' பாட்டிலாயிராப் போவுது'னு கிளம்பி வந்துட்டேன்.-என்று எழதி வைத்துப் போய் இருந்தான்.

அவசியம் இல்லாத செய்தி- இடையில் அவன் " தினம் நம்ம கிட்ட ' எழுவது' ரூவாயை வாங்கிட்டு மாசத்துக்கு 'ஒரு ரூவாய்க்கு' அரிசி போடுதான்.அந்த ஒரு ரூவா அரிசியத் தின்னுட்டு கக்கூசுக்குப் போனா நாலு ரூவா கேக்கான்' சொன்ன அரசியல் பொருளாதார சித்தாந்தம் நமக்குத் தேவை இல்லாதது.

4 comments:

Paleo God said...

//அவசியம் இல்லாத செய்தி- இடையில் அவன் " தினம் நம்ம கிட்ட ' எழுவது' ரூவாயை வாங்கிட்டு மாசத்துக்கு 'ஒரு ரூவாய்க்கு' அரிசி போடுதான்.அந்த ஒரு ரூவா அரிசியத் தின்னுட்டு கக்கூசுக்குப் போனா நாலு ரூவா கேக்கான்' சொன்ன அரசியல் பொருளாதார சித்தாந்தம் நமக்குத் தேவை இல்லாதது//

இன்னிக்குதான் எனக்கு புரிஞ்சுது எகனோமிக்ஸ்.

angel said...

purinjathu ana puriala

Cable சங்கர் said...

interesting ஆனா கேரக்டர்.. தொடருங்க சூர்யா..

சூர்யா - மும்பை said...

நன்றி அண்ணா . வசிஷ்டர் வாயால்.......... என எண்ணிக் கொள்கிறேன் .

அன்புடன் சூர்யா